, , ,

18 சமூக சேவை நிறுவனங்கள் சார்பில் போதை குறித்து விழிப்புணர்வு…..

no drug
Spread the love

கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களிலேயே போதை குறித்து விழிப்புணர்வு இன்றைய தினம் சிங்காநல்லூர் கேஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் இன்று நடைபெற்றது.

கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் நலம் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, ரோஜாவனம் டிரஸ்ட், தாணுமாலையன் அறக்கட்டளை மற்றும் ஜி 18 சமூக சேவை நிறுவனங்கள் சார்பில் கேஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் இன்று நிகழ்ந்தது. அப்பொழுது நிகழ்வில் தலைமையுரையாற்றிய மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) திருமதி பவித்ரா தேவி குழந்தைகள் படிக்கின்ற பருவங்களில் தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து கல்வி கற்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் முன் பின் தெரியாதவர்கள் தருகின்ற உணவுப் பொருட்களையோ இதர பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் போதை அளிக்கின்ற எந்த பொருடகளையும் அது சிகரெட் புகையிலையோ அல்லது இன்னும் மென்று பயன்படுத்தக் கூடிய அளவில் உள்ள போதைப்பொருளோ, எந்தப் பொருளுக்கும் தங்களை அடிமைப்படுத்திக் கொள்ளக்கூடாது என்றும், வருங்காலத்தில் அவர்கள் நல்ல கல்வி பெற்று நல்ல குடிமக்களாக இருக்க போதைக்கு எப்பொழுதும் அடிமையாகக்கூடாது என்றும் அறிவுரைகளை வழங்கினார். குழந்தைகள் பாதுகாப்பு அலகினுடைய சதாசிவம் இந்த திட்டத்தின் கருத்து உணர்ந்து போதை பழக்கங்களை மாணவர்கள் மத்தியில் முளையிலேயே விட்டொழித்து அவர்கள் போதையை எதிர்க்கின்ற அந்த திறனை தன்னார்வத்தை பெறுவதற்கான ஒரு முயற்சி என்றும் நிச்சயமாக எதிர்கால இந்தியாவின் தூண்களாகிய மாணவர்கள் அந்த பொறுப்பினை உணர்ந்து போதைப்பழக்கத்தினை படிக்கின்ற பருவத்திலேயே தடுக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சிக்கு வந்திருந்துவர்களைஉங்களை ஜி 18 அறக்கட்டளையின் உடைய நிறுவனர் பார்த்திபன் வரவேற்றார் போதையின் பாதை என்ற தலைப்பிலே டிஜே வடிவமைப்பு கல்லூரியினுடைய பேராசிரியர் அரிகரசுதன் உரையாற்றினார். மற்றும் கலைமாமணி தாராபுரம் கலா ராணி வாழ்த்துரை வழங்கினார்கள் கோயம்புத்தூர் காஸ்மோபாலிடன் ரோட்டரி சங்க தலைவர் ரமேஷ் தியாகராஜன் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். பத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு முன்னதாக நடத்தப்பட்ட ஓவியப்போட்டி, பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஸ்லோகன் போட்டி, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு போதையில்லா பாரதம் அமைப்பதில் என் பங்கு நிச்சயம் என்பதை உணர்த்தும் விதமாக அனைத்து மாணவ மாணவர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். தொடர்ந்து விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் வெளியிடப்பட்டது. இறுதியாக இத்திட்டத்தினுடைய மாநில ஒருங்கிணைப்பாளர் கலைமாமணி பழனியாப்பிள்ளை நன்றி கூற நிகழ்ச்சி நிறைவு பெற்றது.