நாட்டின் 78வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றினார் . இது அவரது 11வது முறையாகும். இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்திய அரசு சார்பில் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ள 4 ஆயிரம் விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த விழாவையொட்டி பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்தினார். இது அவரது 11-வது சுதந்திர தின உரையாகும். முன்னதாக, சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி இன்று காலை டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றினார். மூவர்ணக்கொடியேற்றிய பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
11வது முறையாக செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி…..

Leave a Reply