திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே தாமலேரிமுத்துார் கிராமத்தில் ரம்யா என்பவர் பெட்டி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று அதே பகுதியை சேர்ந்த மன்சூர் (36).மற்றும் அவரது உறவினரான ஆசிரியர் நகரை சேர்ந்த ரியாஸ்(40). இருவரும் ரம்யா கடைக்கு சென்றனர். அங்கு கடையில் இருந்த பத்து ரூபாய் கூல்டிரிங்சை வாங்கிய இருவரும் சரி பாதி குடித்தனர். அப்போது கூல்ரிங்ஸ் பாட்டில் அடியில் இறந்து கிடந்த பல்லியை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்போது இருவருக்கும் வயிற்று வலியுடன் குமட்டல் ஏற்பட்டது.உடனே இருவரும் திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
10 ரூபாய் கூல்டிரிங்சில் பல்லி….! – குடித்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதி…..

Leave a Reply