கோவை :
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக தேர்தல் களம் ,அரசியல் கட்சிகளுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது என அரசியல் நோக்கர்களின் கணிப்பு. காரணம் ஆளும் திமுக அரசு மீதுள்ள அதிருப்தி, தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி இளைஞர்கள் செல்லும் மோகம் உள்ளிட்ட பல காரணிகளாலும், ஏற்கனவே அரசியல் கட்சிகள் தக்க வைத்துக் கொண்டுள்ள வாக்கு சதவீத குறைந்தது போன்றவற்றால் தமிழ்நாட்டின்
17 -வது சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
திமுக
ஆளும் திமுக தரப்பில், சட்ட மன்றத் தேர்தலுக்கான பணிகள் கடந்த ஆண்டே தொடங்கி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுக தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.தொகுதி பொறுப்பாளர்கள், அந்தந்த மாவட்ட செயலாளருடன் இணைந்து,
தொகுதி வாரியாக ஆலோசனை
கூட்டங்களை நடத்தினர் .
கோவை, திருப்பூர்,ஈரோடு உள்ளிட்ட கொங்கு பகுதிகளில் மொத்தமுள்ள
68 தொகுதிகளில்,24 தொகுதிகளில் மட்டுமே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற முடிந்தது.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்திலிருந்து கொங்கு பகுதி மக்கள், அதிமுகவிற்கு அமோக ஆதரவு அளித்து வந்துள்ளனர். அதே போல புரட்சித்தலைவி ஜெயலலிதாவிற்கு இப்பகுதி மக்கள் பெரும் ஆதரவை நல்கினர். இதன் தொடர்ச்சியாகவே கடந்த 2021-ம் தேர்தலில் அதிமுக 44 இடங்களை கைப்பற்றி திமுகவுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
கோவை மாவட்டம்
கோவை மாவட்டத்தை பொறுத்த அளவில் கடந்த தேர்தலில் ,
அதிமுக கூட்டணி 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
திமுக- காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர்.
மாவட்டம் முழுவதும் பதிவான ஓட்டுக்களின் அடிப்படையில்
அதிமுகவினர் ,
பெற்ற வாக்குகளை விட திமுகவினர் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஓட்டுக்களே குறைவாக பெற்றனர்.
மாவட்டத்திலுள்ள அனைத்து தொகுதிகளிலும், இந்த ஓட்டுக்களை திமுகவிற்கு சாதகமாக வேண்டும் என்ற முனைப்பில் திமுக. மெல்ல தேர்தல் பணிகளில் ஈடுபட தொடங்கி உள்ளன.
வியூகம்
தொண்டாமுத்தூர் தொகுதியில் வலுவான, பத்தாண்டுகள் அமைச்சர் பதவியில் இருந்து, ஏராளமான மக்கள் நல பணித் திட்டங்களை செயல்படுத்திய முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி 41 ஆயத்து 630 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை ஈட்டினார்.
ஆனால் மிக குறைந்த ஓட்டுக்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்ற மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவை வடக்கு, கோவை தெற்கு ஆகிய தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த திமுகவினருக்கு தலைமை உத்தரவிட்டுள்ளது. சூலூர், சிங்காநல்லூர் தொகுதிகளில் அடிப்படையில்,
அதிமுக வாக்கு வங்கி உள்ள பகுதியிகும்.
சூலூர் தொகுதியில் உள்ள விவசாயம், விசைத்தறி சார்ந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்தி,அவர்களுக்கு உரிய நிவாரணம் அரசு மூலம் ஏற்படுத்தி
அந்த சாராரின் ஓட்டுக்களை முழுமையாக திமுக பக்கம் கொண்டு வர வேண்டும் எனவும் அறிவாலயத்திலிருந்து திமுகவினருக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டணியில் உள்ள தோழமை கட்சியினரின் கோரிக்கைகளை உடனடியாக தீர்த்து வைத்து, அவர்களிடம் நிலைத்த நட்பினை உருவாக்கிக் கொள்ள திமுகவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்பு
தனியார் அமைப்புகளுடன் சேர்ந்து, வேலைவாய்ப்பு முகாமினை நடத்தி படித்த இளைஞர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ப வேலைகளை அவர்களுக்கு பெற்றுத் தரும் முயற்சிகளை ஈடுபட வேண்டும் எனவும் திமுக நிர்வாகிகளுக்கு சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் இளைஞர்களை திமுக பக்கம் கொண்டு வரும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் 95 சதவிகிதம் திமுகவினரை வெற்றி பெற்றனர்.
இதற்கு காரணம் அமைச்சர் செந்தில் பாலாஜி. அமைச்சர் செந்தில் பாலாஜி மாவட்ட முழுவதும் மக்கள் குறை தீர்ப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் பொது மக்களுக்கும்,
திமுகவினருக்கும் அதிக நெருக்கம் ஏற்படும்.
இப்படியாக பல யுக்திகளை கையாண்டு கோவை மாவட்டத்திலுள்ள பத்து தொகுதிகளையும் திமுக, தன் வசப்படுத்த ஆயத்தமாகி வருகிறது.
அதிமுக
பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் வரும் சட்ட மன்ற தேர்தல் பணிகளில் ஈடுபட தொடங்கி உள்ளனர். தேர்தலில் வெற்றியின் மிக முக்கிய பங்கு வகிப்பது பூத் கமிட்டி.
கோவை மாவட்டம் முழுவதும்
3 ஆயிரத்துக்கும் அதிகமான பூத்கள் உள்ளன .
இவைகளில் ஒவ்வொரு பூத்துக்கும் குறைந்தபட்சம்
10 பேர் கொண்ட கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு ஒரு பொறுப்பாளர், வார்டு பொறுப்பாளர்,
பகுதி,ஒன்றிய பொறுப்பாளர் என நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
மேலும் கட்சியின் அங்கமான இளைஞர் அணி, பாசறை ஆகிய அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள் தேர்தல் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் முன்னாள் அமைச்சர்
எஸ். பி .வேலுமணியின் நேரடி கட்டுப்பாட்டில் வருகின்றனர்.
அந்தந்த பகுதியில் பொதுமக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை கையில் எடுத்தும், ஆளும் திமுகவினர் செய்யத் தவறியவற்றை சுட்டிக்காட்டியும் அதிமுகவினர் களம் கண்டு வருகின்றனர்.
தேர்தல் ஒருங்கிணைப்பு, கூட்டணி கட்சிகளின் அரவணைப்பு, ஆளும் கட்சி மக்களுக்கு செயல்படுத்திய நலத்திட்டங்கள், நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகள் என பல்வேறு அம்சங்களை முன்னிறுத்தியே ஒவ்வொரு தேர்தலும் நடைபெறுகிறது.
அந்த வகையில் எதிர் வரும் 2026 தேர்தல் யாருக்கு சாதகமாக போகிறதோ …?
Leave a Reply