ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வட்டமலைபாளையம் மற்றும் ஆவாரம்பாளையம், 2024-25 ஆம் கல்வியாண்டில் நடை பெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொது தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.
பள்ளி மாணவி நிவேதா வி 589/ 600 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், ஐஸ்வர்யா டி 558/ 600 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், ஜனனி பி 585 / 600 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.
தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவிகளுக்கு எஸ். என். ஆர். நிர்வாக அறங்காவலர் சுந்தர் பொன்னாடை அணிவித்து, ஊக்கப் பரிசு தொகையும் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் பள்ளி முதல்வர் சாரதா கலந்து கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்து கொண்டார்.
கணினி அறிவியல் பாடத்தில் 5 மாணவர்களும் கணினி பயன்பாடு பாடப்பிரிவில் 5 மாணவர்களும் கணித பாடப்பிரிவில் 2 மாணவர்களும் வணிகவியல் பாட பிரிவில் 1 மாணவரும் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மொத்தம் 13 மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி

Leave a Reply