இந்திய தொழில்நுட்பக் கல்விக்கான அமைப்பு (ஐ.எஸ்.டி.இ) ஆசிரியர்களின் பணிமேம்பாடு, மாணவர்களின் ஆளுமை மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப கல்வி முறையின் வளர்ச்சி என்ற குறிக்கோளுடன் இயங்கி வருகிறது. மாணவர்களின் கல்வி மற்றும் பாடத்திட்ட நடவடிக்கைகளில் முழுமையான செயல்திறனின் அடிப்படையில் சிறந்து விளங்கும் மாணவ,மாணவியருக்கு (ஐ.எஸ்.டி.இ) அமைப்பின் மாநில அளவிலான சிறந்த பிராஜெக்ட் விருது மற்றும் சிறந்த மாணவர் விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி கவுரவித்து வருகிறது.
2024 ஆம் ஆண்டிற்கான ஐ.எஸ்.டி.இ அமைப்பின் மாநில மாணவர் மாநாடு சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது
இம்மாநாட்டில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர் ஈஸ்வர் சிறந்த பிராஜெக்ட் விருதினை பெற்றுள்ளார். மேலும் சிறந்த மாணவர்களுக்கான விருதினை மூன்றாமாண்டு சிவில் இன்ஜினியரிங் துறை மாணவர் வி. எஸ் முகுந்த் பிரனவ் மற்றும் மூன்றாமாண்டு கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் துறை மாணவர் ஜோனாதன் வில்பிரட் ஆகியோர் இச்சிறப்பு விருதுகளை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
விருது பெற்ற இம்மாணவர்களை எஸ்.என்.ஆர் சன்ஸ்.அறக்கட்டளை நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் , கல்லூரி முதல்வர். டாக்டர். டி. கோபாலகிருஷ்ணன் , துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Leave a Reply