, ,

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இஸ்ரேல் ஏரியல் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

mou
Spread the love

கோவை , எஸ் .என் .ஆர் சன்ஸ் அறக்கட்டளையின், ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், இஸ்ரேலை சேர்ந்த ஏரியல் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஒப்பந்தத்தில் எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ஆர் சுந்தர் மற்றும் ஏரியல் பல்கலைக்கழகத்தின் ஆல்பர்ட் பின்ஹாசவ் ஆகியோர் கையெ ழுத்திட்டனர்.
ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இரு நிறுவனங்கள் கூட்டுக் கல்வி மற்றும் ஆராய்ச்சி முயற்சிகளை மேற்கொள்வதற்கும், பாடத்திட்டங்களை உருவாக்குவதற்கும் தொழில்நுட்ப பரிமாற்றத்தை மேற்கொள்வதற்கும், சைபர் துறையில் பாதுகாப்பு, சுகாதார அறிவியல் என பல்வேறு துறைகளில் மாணவ மாணவியர்களின் திறன்களை மேம்படுத்த உதவும்.
மேலும், அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் பயன்பாடுகளை மேம்படுத்தி, அதன் மூலம் அறிவியல் முன்னேற்றத்தை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஊக்குவிக்கிறது.
முன்னதாக இக்குழு, இஸ்ரேலை சேர்ந்த ப்ரோமிட்டய் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் இணைந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் அமைந்திருந்த சைபர் செக்யூரிட்டி, ஸ்மார்ட் ஃபேக்டரி இண்டஸ்ட்ரி 4.0, எலக்ட்ரிகல் மொபிலிட்டி போன்ற ஆராய்ச்சி மையங்களை பார்வையிட்டனர்.
விழாவில், எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் துணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன், அறங்காவலர் ராமகிருஷ்ணா கல்வித்துறை இயக்குநர் என்.ஆர்.அலமேலு, பொறியியல் கல்லூரி முதல்வர் சௌந்தர்ராஜன் இஸ்ரேல் ஏரியல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் அமித், நாடியா, ப்ரோமிட்டய் லிமிடெட் நிறுவனத்தின் லேமுவேல் மேலமேட், மார்க் மேலமேட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *