கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் போதைப்பொருள் தடுப்புக்குழு, கோவை மாநகர காவல்துறை, நாட்டு நலப்பணித்திட்டம் ஆகியவை, யுவா கிளப்புடன் இணைந்து நடத்திய போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். ஆனமலைஸ் டொயோட்டோ இயக்குநர் சௌமியா காயத்ரி, ஆர்த்தோ ஒன் இயக்குநர் கரோலின் ராஜன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை காவல் ஆய்வாளர் எம்.கே.சரவணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, போதைப்பொருட்களின் தீமை குறித்து மாணவர்களுக்கு விளக்கிக் கூறினர்.
அதைத்தொடர்ந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாபெரும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாகப் பங்கேற்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். ஆயிரக்கணக்கான மாணவர்கள் “NO DRUGS” என்ற வடிவில் அமர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பின்னர் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகளின் போதைப்பொருள் விழிப்புணர்வு நாடகம் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. முன்னதாக யுவா கிளப் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜினி எம்.ஜேம்ஸ் வரவேற்றார். முடிவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் ஆர்.நாகராஜன் நன்றி கூறினார்.
Leave a Reply