, ,

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் எப்போ வருவாரோ நிகழ்ச்சியில் ஆன்மீக அரசர் ஸ்ரீ கிருஷ்ண ஜெகந்நாதன்

Sri krishna sweets
Spread the love

இரண்டாம் நாள் நிகழ்வில் ஆன்மீக அரசர் ஸ்ரீ கிருஷ்ண ஜெகந்நாதன், வள்ளற் பெருமானை பற்றி பேசினார்.

திரு அருட்பாவை உயிர்ப்புடன், உணர்வுடன் பாடியும், பேசியும் திருவருட்பிரகாச வள்ளலாருக்கு மேலும் பெருமையையும், புகழையும் சேர்த்தார். திரு அருட்பாவில் உள்ள ஆறு திருமுறைகளும் வெளி வர காரணமாக இருந்தவர் தொழுவூர் வேலாயுதம் முதலியார். அவரை தொடர்ந்து பாலகிருஷ்ணன் பிள்ளை, ஊரன் அடிகள், அருட்பாவை அகில உலகம் முழுவதும் கொண்டு சென்ற பொள்ளாச்சி நா. மகாலிங்கம் ஆகியோரை என்றும் நினைவில் நிறுத்த வேண்டும் என்று பேச தொடங்கிய கிருஷ்ண ஜெகன்னாதன், சித்த மருத்துவ சீலராக வள்ளலார் வாழ்ந்தவர். அரை வயிறு மட்டுமே ஆகாரம் உட்கொள்ள வேண்டும், 8 மணி நேரமி தூங்க வேண்டும், மாதத்திற்கு இரு முறை மட்டுமே கணவன் – மனைவி கூட வேண்டும், அச்சமே கொள்ளாது வாழ வேண்டும் என்ற நான்கு முறைமைகளை மனித குலத்திற்கு வகுத்தளித்தவர் வள்ளலார். தாயும், மனைவியும் இறந்த பின்பே சென்னைக்குச் சென்று ஆன்மீகம் வளர்த்தவர். வேதத்தின் பிழிவே திருவருட்பா. வள்ளலார் பாடாத உருவ கடவுள்கள் இல்லை. ராமரையும் லட்சுமியையும் போற்றிப் பாடியுள்ளார்.

“அருட்பெரும் ஜோதி…! அருட்பெருஞ் ஜோதி…! தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி “என்ற மகா மந்திரத்தை அருளியவர். ஜோதியே சொருபமானவன் இறைவன் என்பதனை இறுதிவரை சொன்னவர். இறைவனிடம் வேண்டுதல் விண்ணப்பம் வைக்க, பல பாடல்கள் வள்ளலார் எழுதியுள்ளார். வரும் ஜனவரி 22-ம் நடைபெற்ற உள்ள அயோத்தி ராமர் கும்பாபிஷேக நாளில் வீடுகளில் ஜோதி ஏற்றி அனைவரும் வழிபட வேண்டும்.