ஆ.வெ.மாணிக்கவாசகம்
நா மணக்க நினைத்தாலே இனிக்கும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் மனதில் இன்பம் பொங்கும் இனிப்புகள் போல, ஆன்மீக ஆர்வலர்களுக்கும், இலக்கிய சுவைஞர் களுக்கும் ஆங்கில புத்தாண்டு முதல் நாள் முதல், ஒன்பதாம் நாள் வரை ஆன்மீகம் தோய்ந்த அறிவையும், அறிவியலை யும் அருளாளர்களின் அணிவகுப்பை கேட்கவும், பார்க்கவும் ஓராண்டு உடனே முடியாதா? எனும் இன்ப ஏக்கம் வந்து, வந்து எட்டிப் பார்த்து செல்லும்.
ஆம்…! அந்த அளவிற்கு “எப்பவருவாரோ….?” ஆன்மீகத் தேடல் சொற்பொழிவு நிகழ்வு, அனைவருமே எதிர்பார்த்து காத்திருக்கும் கனிவான நிகழ்ச்சி. நவராத்திரி நன்நாள் போன்று ஒன்பது நாள் பரவசத்தில், பரம் பொருளைப் பற்றியும்,பரமாத்மாவைப் பற்றியும் பாங்குடன் பண்டிதர்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ள மேடையில், அருந்தமிழால் அலங்கரித்துக் கொண்டே இருப்பர்.
வயது முதிர்ந்தவர் களை காட்டிலும், இளைஞர் களும், இளம் பெண்களும் கோவை கிக்கானி பள்ளிவளாகத்தில் அமைந்துள்ள சரோஜினி நடராஜ் அரங்
கத்திற்கு வருகை தந்து ஆர்வமுடன் அருளாளர்கள் பற்றிய அரும், பெரும் சொற்திரல் களை செவி மடுப்பதை சில ஆண்டுகளாக கண்ணுற முடிகிறது.
தமிழ் ஆன்மீக, இலக்கிய உலகில், வானளாவிய புகழ் கொண்ட பேச்சாளர்களை 17 ஆண்டு காலமாக அழைத்து, கோவை ஆன்மீக, இலக்கிய ரசிகர்
களுக்கு அருளை, ஞானத்தை அளித்து வருகிறார் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் எம்.கிருஷ்ணன்.
2024-எப்ப வருவாரோ? ஆன்மீகத் தேடல் நிகழ்வு 18 -ம் ஆண்டாக பாங்குடன் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.ஆன்மீகத் தொண்டே அருள் என வாழ்வென வாழ்ந்து வரும் அடியவர்களுக்கான பாராட்டும், விருதும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு “அருள் வளர் செம்மல்” விருதுகள் பவானி தியாகராசன், எஸ்.ஏ. ராதாகிருஷ்ணன், எஸ் .பி. தாமோதரன், சாவித்திரி தாமோதரன், ஏ.வி.திருமூர்த்தி, வெங்கடம்மாள் ஐங்கரன் ஆகியோருக்கு அளித்து மகிழ்ந்தார் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் எம்.கிருஷ்ணன். திருவாரூர் ஆழித்தேரில் அமர்ந்து அருளாளர்களைப் பற்றி, அறிஞர்கள் அரும் தமிழால், அகத்திற்கு ஆன்மாவை புகட்டினர்.
முதல் நாளில் பாம்பன் சுவாமிகள் பற்றி பேச்சாளர் பாரதிபாஸ்கர் பேசுகையில் பாம்பனில் 1850-52 கால கட்டங்களில்,சாந்த பிள்ளை – செங்கமலம் தம்பதியருக்கு அப்பாவு ஆக அவதரித்தவர் தான் பாம்பன் சுவாமிகள். சிறு வயதில் பாலன் தேவராய சுவாமிகள் அருளிய கந்த சஷ்டி கவசத்தை கேட்க நேர்ந்தது.
“சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் ஒரு நாள் முப்பத்தாறுருக் கொண்டு ஓதியே செபித்து உகந்து நீறணிய அஷ்டதிக்குள்ளோர் அடங்கலும் வசமாய்த்திசை மன்ன ரின் ரெண்மர் செயலது அருள்வார்”- என்ற கந்த சஷ்டி கவச வரிகளுக்கு ஏற்பபாம்பன் சுவாமிகள், ஒரு நாளைக்கு 36 முறை
பாராயணம் செய்தார். பாட, பாட மால் மருகனின் அருளில் முழுமையாய் கரைந்தார். “பிறப்பை வலசு” என்கின்ற சுடுகாட்டில் ஆறுக்கு ஆறு குழி வெட்டி, மேலே சிறிய கொட்டகை போட்டு, அதில் இருந்து கொண்டார். ஒரு வேளை மட்டுமே உணவு அருந்தி, முருகனின் மூல மந்திரத்தையே ஜெபித்துக் கொண்டே இருந்தார்.
கந்தனை கண்டு கொண்டு தான் மேலே வருவேன் எனும் உறுதிமிக்க மனத்தோடு 35 நாட்கள் அந்த குழியிலேயே வாழ்ந்தார். அப்போது சொல்லனா துயரங்களை அனுபவித்தார்.
இயற்கை அச்சுறுத்தல்கள் அதிகமாக இருந்தது. அருணகிரிநாதர், அகத்தியருடன் குழந்தை வடிவாக கந்தன் தோன்றி, சடாட்சர மந்திரத்தை உப
தேசம் செய்தார். 35-ம் நாள் சித்ரா பௌவுர்ணமி யன்று வெளியே வந்த பாம்பன் சுவாமிகள் 1919-ல் துறவு வாழ்வு மேற்கொண்டார்.
வள்ளி மணளானிடம், உன் பாதத்தை நினைப்பதைத் தவிர வேறு எந்த எண்ணமும் எனக்கு வேண்டாம்; வயிற்றுக்கு யாரிடமும் சோறு கேட்க மாட்டேன், அவர்களாக வந்து அளித்தால் மட்டுமே உண்பேன் ; எந்த உயிருக்கும் தீங்கிழைக்க மாட்டேன்; எதைக் கண்டும் பிரமிப்போ, ஆச்சரியமோ பட மாட்டேன் ஆகிய சபதங்களை ஏற்று, சைவத்தை வளர்க்க புறப்பட்டார். பல திருத்தலங்களுக்குச் சென்று, 6 ஆயிரத்திற்கு அதிகமான பாடல்களை அருளிச்செய்தார்.
Leave a Reply