,

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் 23வது முதலாம் ஆண்டு மாணவ மாணவியர் வரவேற்பு விழா

srit
Spread the love

கோவை  ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் 23வது முதலாம் ஆண்டு மாணவ மாணவியர் வரவேற்பு விழா கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் வி. தீனதயாளன், சிஇஓ, ஸ்ரீராம் இன்ஜினியரிங் ஒர்க்ஸ்,எம்.டி., ஸ்ரீராம் ஸ்பிராய்ட்ஸ் & கிராஃபைட்ஸ் (பி) லிமிடெட்.,தலைவர், என் ஐ க்யூ ஆர் (NIQR) கோயம்புத்தூர் பிரிவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு “தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப உங்கள் பொறியியல் வாழ்க்கையை வடிவமைத்தல்” என்ற தலைப்பில் உரையாற்றினார். மேலும் Rtn சி.புலியூருடையன், நிர்வாக இயக்குனர் கிளியர் டெக் பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் செயலாளர், என் ஐ க்யூ ஆர் (NIQR)  கோயம்புத்தூர் பிரிவு, கெளரவ விருந்தினராக கலந்து கொண்டார்கள்.

இவ்விழாவிற்கு எஸ். என். ஆர் சன்ஸ் சாரிடபிள் டிரஸ்டின் இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமையேற்று, சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக 2007-2011 ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவி எஸ்.பிரியா ஆவடை, துணைத் தலைவர் / வணிக ஆய்வாளர் பேங்க் ஆஃப் நியூயார்க், சென்னை, கலந்து கொண்டார்.

மேலும் எஸ் என் ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இயக்குனர் (கல்வித்துறை) முனைவர் என் ஆர் அலமேலு வாழ்த்துரை வழங்கினார்.

முன்னதாக விழாவின் வரவேற்புரையைக் கல்லூரி முதல்வர் முனைவர் ஜே.டேவிட் ரத்தினராஜ் வழங்கினார். இவ்விழாவில் பல்வேறு துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியல் துறைத்தலைவர் முனைவர் எஸ்.அனிலா நன்றி உரை  வழங்கினார் .