, ,

ஸ்ரீதேவி டெக்ஸ்டைல் முன்னர் நிறுத்தப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் உரிமையாளர் சிவகணேஷின் பாரம்பரிய பற்று

shreedevi textiles
Spread the love

கோவை கிராஸ்கட் சாலையில் ஜவுளி நிறுவனம் ஸ்ரீதேவி சில்க்ஸ் செயல் பட்டு வருகிறது. இதன் உரிமையாளரான சிவகணேஷ் கடவுள் பக்தி மிகுந்தவர். தமிழக பாரம்பரியத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவர். அதோடு, தனது வருமா
னத்தின் பெரும் பகுதியை மக்களுக்கே திருப்பி சேவையாக செய்பவர். இவர், வெள்ளியங்கிரியில் கோசாலை அமைத்து 3,500 க்கும் மேற்பட்ட நாட்டின மாடுகளை பராமரித்து வருகிறார். மேலும் கோவையில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு காப்பகங்கள், முதியோர் இல்லங்கள், சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு நாள்தோறும் மூன்று வேலையும் இலவசமாக உணவு வழங்குவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். கிராஸ்கட் சாலையில் உள்ள தனது ஸ்ரீதேவி நிறுவனத்தில் கேண்டீன் அமைத்து, 3 வேளையும் ஏழைகளுக்கு உணவு கிடைக்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிராஸ்கட் ரோட்டிலுள்ள ஸ்ரீதேவி டெக்ஸ்டைல் முன்னர் மக்கள் பார்வையிடும் வகையில், ஜல்லிக்கட்டு காளைகளை அணிவகுத்து நிறுத்தி வைத்துள்ளார். இந்த காளைகளை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். இது குறித்து சிவகணேஷ் கூறுகையில், எங்களது வெள்ளியங்கிரி கோசாலையில் 3 ஆயிரத்து 500 மாடுகளை வளர்த்து வருகிறேன். அவற்றில் 250 ஜல்லிக்கட்டு காளைகளும் உண்டு. தென் மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் எனது காளைகள் பங்கேற்கின்றன. எங்களுடைய வெள்ளியங் கிரி கோசாலை காளைகள் என்றாலே அடக்க வீரர் களிடத்தில் ஒரு வித அச்சத்தை பார்க்க முடியும்.
இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் எங்கள் காளைகள் கலந்து கொண்டு வெற்றியை குவிக்கும் என்று நம்புகிறேன். இந்த மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவர்கள், பயிற்சியாளர்கள், பராமரிக்க பணியாளர்கள் என எங்கள் கோசாலையில் ஏராளமானோர் உள்ளனர். கோசாலையிலுள்ள எந்த மாடுகளையும் நாங்கள் விற்பதில்லை.
வெளியில் இருந்து எத்தனை மாடுகள் வந்தாலும், அவற்றை ஏற்று கொண்டு பராமரிக்கிறோம். தமிழ் தான் தன் அடையாளம். தமிழர் பாரம்பரியம் தான் எனது வாழ்க்கை. நமது நாட்டு மாடுகளை அழிந்து விடக்கூடாது. இதற்காக., விரைவில் இனப்பெருக்க மையம் தொடங்கவுள்ளேன். ஜல்லிக்கட்டு காளைகளை அனைவரும் கண்டு களிக்க வேண்டும் . அவற்றின் முக்கியத்துவத்தை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதனால், எனது கடை முன் ஜல்லிக்கட்டு காளைகளை நிறுத்தி வைத்துள்ளேன். மக்கள் ஆர்வத்துடன் காளைகளை பார்த்து செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த ஆண்டு பிரமாண்ட அளவில் நாட்டு மாடு இன கண்காட்சியை நடத்தவுள்ளேன்.