,

வெள்ளம் பாதித்த தென்மாவட்டங்களுக்கு 30 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

sp velumani
Spread the love

முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ் பி வேலுமணி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு உதவிடும் விதமாக முப்பது லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார்.
கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அதிமுக மதுக்கரை நகர கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 30 லட்சம் மதிப்பிலான, போர்வைகள், பிஸ்கட்கள், ரொட்டிகள், குடிதண்ணீர் மற்றும் அரிசி, பருப்பு உட்பட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய வெள்ள நிவாரண பொருட்களை கோவை சுகுணாபுரம் மைல்கல் பகுதியில் இருந்து முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ் பி வேலுமணி கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் வாகனத்தில் அதிமுக தொண்டர்களும் பயணித்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்க உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ தாமோதரன், முன்னாள் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம், மதுக்கரை நகரக் கழகச் செயலாளர் சண்முகராஜா, மற்றும் கோவை புறநகர்  தெற்கு மாவட்ட விவசாயிகள் பிரிவு செயலாளர் மகாலிங்கம் உட்பட அதிமுக முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.