7 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடந்த தொழிற்சாலையை மீண்டும் துவக்க முயற்சித்த போது, அமோனியா வாயு நள்ளிரவில் வெளியேறியதால் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உடல் பாதிப்புகள் ஏற்பட்டது.
சென்னிவீரம்பாளையம் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிப்ஸ் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இந்த தொழிற்சாலை பூட்டியே கிடந்தது. இதையடுத்து இந்த தொழிற்சாலையை வங்கி நிர்வாகம் ஏலம் விட்டது. அதை எடுத்த நபர் மீண்டும் அங்கு சிப்ஸ் தொழிற்சாலை அமைக்க முயற்சி எடுத்து வருகிறார். இதற்காக அங்குள்ள இயந்திரங்களை இயக்கும் முயற்சியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அங்கு ஏற்கெனவே சேமித்து வைக்கப்பட்டிருந்த அம்மோனியா வாயு கசிந்தால் அருகிலுள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டுது. உடனடியாக அவர்கள் அனைவரும் தொழிற்சாலை பகுதியிலிருந்து 200 மீட்டருக்கு அப்பால் அப்புறப்படுத்தப்பட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் வல்லுநர்கள் ஆலைக்குள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அமோனியா வாயு கசிவு இருப்பதால், அதனை அவர்கள் சரிப்படுத்தினர். இதனால் சற்று நேரத்தில் அமோனியா வாயுவின் தீவிரம் குறைந்தது இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆலையை சுற்றி இருக்கும் மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு தனியார் மருத்துவமனையில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.இன்று வருவாய்த்துறையினர்,காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் ஆலையை ஆய்வு செய்தனர். அப்போது முழுமையாக அம்மோனியா வாயு கசிவு தடுத்து நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் அவர்களது வீடுகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது.
அப்போது ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம், இந்த ஆலையை இங்கு செயல்பட அனுமதிக்க கூடாது என்று பொதுமக்கள் முற்றுகையிட்டு கோரிக்கை விடுத்தனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் அறிக்கையின் அடிப்படையில், நிறுவனத்தை தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் அப்போது உறுதி அளித்தனர்.
Leave a Reply