தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதனாலும் வெப்ப அலை வீசுவதாலும் பொதுமக்கள் முதல் வாயில்லாத உயிரினங்கள் வரை கோடை வெயிலால் கடும் அவதிக்கு அடைந்துள்ளனர்.வெயிலையொட்டி வீட்டு மாடிகளில் நீரும்,உணவும் வைத்து பறவைகளின் பசி,தாகத்தை தீர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவில் ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்து வருகிறது அப்பூங்காவில் பறவைகள் மற்றும் உயிரினங்களுக்கு நீர் தொட்டியில் நீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அங்க இருக்க கூடிய பறவைகளுக்கு அங்கு பணிபுரியும் ஊழியர் அதன் மீது தண்ணீர் பீச்சி அடிக்கின்றனர். பறவைகளும் பீச்சி அடிக்கும் நீரில் வெயிலின் தாகம் தாங்க முடியாமல் ஆனந்த குளியலில் சந்தோசமாக குளித்து வருகிறது
Leave a Reply