,

வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

sp velumani
Spread the love

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீர முழக்கமிட்டு தூக்கு மேடை ஏறிய வீரபாண்டிய கட்டபொம்மனின் 265 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை ஈச்சனாரியில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி கொறடாவுமான எஸ் பி வேலுமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை ஏ. சண்முகம், மதுக்கரை நகரக் அதிமுக செயலாளர் கே. சண்முகராஜா, ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், பகுதி செயலாளர்கள் கே.பெருமாள் சாமி, ஏ. ரபிக் மற்றும் குறிச்சி மரியா, ஜெயகுமார், முன்னாள் கவுன்சிலர் வேணுகோபால் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் உள்ளனர்.