வீரத்தையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் திருவிழா – கோவையில் களைகட்டும் ஜல்லிக்கட்டு
மண்ணின் வாசனையோடு வீரத்தையும், மரபையும் கௌரவிக்கும் ஜல்லிக்கட்டு திருவிழாவுக்கு கோவை தயாராகி வருகிறது.
கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை இணைந்து நடத்தும் இந்தப் பாரம்பரிய விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. எல்.என்.டி பைபாஸ் சாலையோரத்தில் ஜல்லிக்கட்டு களம் – வாடிவாசல், பாதுகாப்பு கலந்த கேலரிகள், பார்வையாளர்களுக்கான வசதிகள் அனைத்தும் மிக சிறப்பாக அமைக்கப்பட்டு வருகின்றன.
வீரருக்கான வீரவணக்கம் – சிலை மற்றும் செல்பி பாயிண்ட்:
மாடுபிடி வீரர்களின் வீரத்தைப் போற்றும் வகையில், காளையை அடக்கும் வீரரை பிரதிபலிக்கும் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது, பாரம்பரியத்தின் பிம்பமாக சமூக வலைத்தளங்களில் பேசப்படும் செல்பி பாயிண்டாகவும் செயல்படுகிறது.
விழாவில் 750 காளைகள் கலந்து கொள்கின்றன. அவற்றை சமாளிக்க, 500 வீரர்கள் ஏற்கனவே பெயர் பதிவு செய்து விட்டனர். 10,000 பேர் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள கேலரிகள், விழாவின் வித்தியாசத்தை உணர்த்துகின்றன.
முதல் பரிசாக காரும், இரண்டாம் பரிசாக பைக்கும், மூன்றாம் பரிசாக ஸ்கூட்டரும் வழங்கப்படுகிறது. அத்துடன், சிறந்த காளைகளுக்கும், போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரருக்கும் ₹5,000 மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
இந்த ஆண்டுக்கான விழாவை தமிழக துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். அவரது பங்கேற்பு விழாவிற்கு அரசியல் முக்கியத்துவத்தையும் சேர்க்கிறது.
மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் இன்று பிற்பகலுக்குள் coimbatore.nic.in இணையதளத்தில் தங்களை பதிவு செய்ய வேண்டும். கால்நடை பராமரிப்பு விதிமுறைகள் வீரர்கள கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திரு. பவன் குமார் தெரிவித்துள்ளார்.
Leave a Reply