இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் மு. கருணாநிதி நூற்றாண்டு பொன் விழாவை சிறப்பித்திடும் வகையில் அனைத்து ஊராட்சிகளுக்கும் “டாக்டர். கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்” கீழ் 86 கோடி ரூபாய் செலவில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்” என அறிவித்தார்.
மேலும், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் ரோலர் ஸ்கேட்டிங் வீராங்கனை செல்வி. நௌஷீன் பானு சந்த், டென்சிங் ஹிலாரி மவுண்ட் எவரெஸ்ட் சர்வதேச மாரத்தான் போட்டியில் பங்குபெற ரூ. 5.25 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் கொண்டு செல்லும் வாகனத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு. முத்துசாமி, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர். அதுல்ய மிஸ்ரா, கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே. சண்முகசுந்தரம், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, ரோலர் ஸ்கேட்டிங் வீராங்கனை நௌஷீன் பானு சந்த், ஆசிய தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ், ஆசிய சைக்கிளிங் வீராங்கனை ஜெ. பி. தனியதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Leave a Reply