தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள விண்வெளி வரைவு கொள்கையை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டிணத்தில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் அமைய உள்ளது, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் கூரபட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதி பெரும் அளவில் வளர்ச்சி பெறும் என்று நம்பப்படுகிறது. அதே வேளையில், அங்கு மீன்பிடி தொழிலை ஆதாரமாக கொண்டுள்ள மீனவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாக உள்ளது.
இந்த நிலையில், விண்வெளி துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 வேலை வாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, மதுரை, துாத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களை (Space bay) விண்வெளி தொழில் விரிவாக்க மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கை கூட்டத்தொடரில் ஜூன் 27-ம் தேதி அன்ற தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், தமிழக அரசின் விண்வெளி வரைவுக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
Leave a Reply