,

விஜய் தொடங்கிய கட்சிக்கு வாழ்த்துக்கள் – அமைச்சர் முத்துசாமி பேட்டி

muthusamy
Spread the love

கோவை பீளமேடு பகுதியில் உள்ள கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளியில் அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு, மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,

விஜய் அரசியலுக்கு வந்துள்ளது தொடர்பான கேள்விக்கு, புதுசா வருபவர்களுக்கு வாழ்த்து சொல்வது தான் மரியாதை நாங்கள் விஜய் தொடங்கிய கட்சிக்கு வாழ்த்துக்கள் சொல்கிறோம். திமுகவை பற்றி மக்களுக்கு தெரியும். திமுக தனித்துவமான கட்சி.நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கான பணிகளை தொடர்ச்சியாக செய்து வரும் தேர்தலுக்கு என்று தனியாக நாங்கள் வேலை செய்யவில்லை.

அரசு இருந்தபோதும் சரி, இல்லாத போதும் சரி திமுக தொடர்ச்சியாக மக்களுக்கு பணி செய்து வருகிறது. அந்த வகையில் தான் இப்போதும் பணி செய்து வருகிறோம்.தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு நாங்கள் பணி செய்வதில்லை. மக்களை நோக்கி எப்போதும் பணி செய்வோம்.நாம் தமிழர் கட்சி மீது வெறுப்புணர்ச்சியோடு என்.ஐ.ஏ சோதனை செய்தால் அது தவறு. ஆனால் அதைப் பற்றி நாங்கள் இப்போது கருத்து சொல்வது சரியில்லை.” என்றார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, முன்னாள சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் , வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தனபால், மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.