,

வள்ளலார் காலனியில் டாக்டர் அம்பேத்கர் மாலை நேர பாட சாலை திறப்பு

பல்சமய நல்லுறவு இயக்கம்
Spread the love

கோவை வெள்ளலூர் பகுதியில் மாணவ, மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக துவங்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் மாலை நேர இலவச பாடசாலையை, பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் துவக்கி வைத்தார்.

கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள வள்ளலார் காலனியில் 75 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக, டாக்டர் அம்பேத்கர் மாலை நேர பாட சாலை துவங்கப்பட்டது. ராவ் சாகிப் எல்சி குருசாமி கல்வி மையம் மற்றும் நீலம் பண்பாட்டு மையம் ஆகிய அமைப்புகள் சார்பாக அமைக்கப்பட்ட இந்த பாட சாலை கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது. டாக்டர் அம்பேத்கரின் செயல்பாடு அவரின் தியாகங்கள் குறித்து பேசினர்.

சிறப்பு விருந்தினர்கள் சிறப்புரையாற்றினார்கள். பாடசாலைதிறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக, பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவரும் சமூக சேவகரும் ஆன முகம்மது ரபீக் கலந்து கொண்டு மாலை நேர பாட சாலையை துவக்கி வைத்து தொடர்ந்து பேசிய அவர், இந்திய நாட்டின் ஜனநாயகம் உலக அளவில் பேசப்படுவதற்கு,டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலைப்பு சட்டமே என சுட்டி காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், இன்றைய இளம் தலைமுறை மாணவர்கள் அண்ணல் காந்தி மற்றும் அம்பேத்கரின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டு கொண்டார். குறிப்பாக கல்வி கற்பதன் அவசியம் குறித்து பேசிய அவர்,கல்வியோடு ஒழுக்கத்தையும் மாணவ, மாணவிகள் கற்று கொள்ள வேண்டும் எனவும், இதற்கு ஆசிரியர்கள் பெற்றோர்களின் பங்களிப்பு அவசியம் என குறிப்பிட்டார். குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.