வரதட்ணை கொடுமை..! போலீஸ் அதிகாரி மீது மனைவி பரபரப்பு புகார்

Spread the love

மதுரையில், வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய விவகாரத்தில், இரு காவலர்கள் உட்பட நான்கு பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் காவல் ஆய்வாளராக பணியாற்றும் செந்தில்குமரனின் மகன் பூபாலன், மதுரை அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக உள்ளார்.

பூபாலன் மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தங்கப்பிரியா ஆகியோருக்கு 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தங்களது ஏழு வயது மகனும், ஐந்து வயது மகளும் உள்ள குடும்பத்தில் தங்கப்பிரியா தற்போது தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

தன் கணவரும், மாமனாரும், நாத்தனாருமான அனிதா உள்ளிட்டோர், தன்னை வரதட்சணை கேட்டு மனவேதனையுடன் கொடுமைப்படுத்தியதாக தங்கப்பிரியா புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.