, ,

வடகொரியாவில் மக்கள் தங்கள் விருப்பம் போல முடி வெட்டிக் கொள்ள முடியாது

north korea
Spread the love
வடகொரியாவை பொறுத்த வரை, அந்த நாட்டு மக்கள் தங்கள் விருப்பம் போல முடி வெட்டிக் கொள்ள முடியாது. அரசுதான் உங்கள் சிகையலங்காரத்தை முடிவு செய்யும். இரு பாலாருக்கும் 15 வகை சிகையலங்காரங்கள் உள்ளன. அவற்றை மட்டுமே பின்பற்ற வேண்டும்.  ஆனால், அதிபர் கிம் ஜாங் உன் எப்படி வேண்டுமென்றாலும் முடி வெட்டிக் கொள்வார். அதே போல, வட கொரிய அதிபர் அணியும் கண்கண்ணாடி கூட போல கூட நீங்கள் கண்ணாடி வாங்கி அணிந்து கொள்ள முடியாது. டைட் ஜீன்ஸ் உள்ளிட்டவையும் இந்த நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. தலைக்கு ஹேர் டை அடித்து கொள்ள முடியாது. பெண்கள் லிப்ஸ்டிக் பூசிக் கொள்ள முடியாது. மினிமம் மேக் அப் மட்டுமே பெண்களுக்கு அனுமதிக்கப்படும். இதுவெல்லாம் மேற்கத்திய கலாசாரம் என்பது அந்த நாட்டு அரசின் கருத்து. இத்தகையை தடைகள் எல்லாம் நம்மை வியக்க வைக்கிறது அல்லவா? சரி இந்த விதிகளை அமல்படுத்துவது யார்? வடகொரிய போலீஸ்தான். வட கொரிய போலீசில்,  ஃ பேஷன் போலீஸ் என்ற தனிப்பிரிவு உண்டு. இவர்கள்தான் மக்களை கண்காணிப்பார்கள். யாராவது விதிளை மீறினால் உங்கள் வீட்டு கதவை ஃபேஷன் போலீஸ் தட்டி விடும். விதிகளை மீறி உடை அணிந்திருந்தால், அந்த இடத்திலேயே உங்கள் உடையில் கட்டிங் நடக்கும். இதையெல்லாம், இந்த நாட்டு அரசு செய்ய காரணம்.. உள்நாட்டு மக்களுக்கு வெளிநாட்டு மோகம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே. மேற்கத்திய கலாசாரத்தை அனுபவிக்க தொடங்கினால்,  தங்கள் நாடு மீது மக்களுக்கு வெறுப்பு வந்து விடும். புரட்சி அது இதுவென்று ஈடுபடுவார்கள் என்பதால் மக்களுக்கு இத்தகைய கடும் கட்டுப்பாடுகளை வட கொரிய அரசு விதிக்கிறது.

அது மட்டுமல்ல , வடகொரிய மக்கள் உள்நாட்டில் ஏதாவது பயணம் மேற்கொண்டால் அரசின் அனுமதி பெற வேண்டும். பயணத்தின் நோக்கத்தை பற்றி கூற வேண்டும். அனுமதித்தால் மட்டுமே பயணிக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு  ரகசியமாக சென்றால் தேச துரோக வழக்கில் கைது செய்யப்படுவீர்கள். அப்புறம் வாழ்நாளுக்கும் குடும்பத்தோடு சிறைதான். சில சமயங்களில் தூக்கிலும் போடப்படுவீர்கள். இந்த தொடரின் முதலில் சிறையில் பிறந்த குழந்தை ஷின் டாங்கின் கதையை படித்தோமல்லவா? அந்த சிறுவனின் மாமா ரகசியமாக தென்கொரியாவுக்கு சென்று விட்டார். அதன் காரணமாகவே, அவரின் சகோதரி  சிறையில் குடும்பத்துடன் அடைக்கப்பட்டிருந்தார். இதுதான் ஷின் டாங் சிறையில் அடைக்கப்பட்டதன்  பின்னணி. கோவிட் காலக்கட்டத்துக்கு பிறகு, வடகொரியாவின் எல்லையில் இருந்து  வெளியே செல்ல முயன்றாலோ, உள்ளே நுழைய முயன்றாலோ தயக்கமே இல்லாமல் சுட்டுக் கொல்வதை வட கொரி ராணுவம் வழக்கத்தில் வைத்துள்ளது. கடந்த 2020 – 2022 ஆம் ஆண்டுக்குள் எல்லையை கடக்க முயன்ற 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பல வடகொரியர்கள் பலரும்  தரை வழியாக சீனாவுக்குள் நுழைவார்கள். ஆனால், சீன அரசு அவர்களை பிடித்து வடகொரியாவிடம் ஒப்படைத்து விடும். இவர்கள் அனைவரும் கேம்ப் 14 போன்ற சிறைகளில் அடைக்கப்பட்டு வாழ்நாளுக்கும் துன்பத்தை அனுபவிப்பார்கள்.

வட கொரியாவில் வெளிநாட்டு சினிமா பார்த்தால் என்ன நடக்கும்? சோசியல் மீடியா உண்டா… பார்க்கலாம் அடுத்த வாரம்-