மத்திய அரசுத் துறைகளின் பணியிடங்களுக்கு லேட்டரல் என்ட்ரி முறையில் பணி நியமனம் செய்வது சமூக நீதிக்கு எதிரானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்மையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் யுபிஎஸ்சி, லேட்டரல் என்ட்ரி எனப்படும் நேரடி நியமனம் மூலம் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 10 இணைச் செயலாளர்கள் மற்றும் 35 துணை செயலாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.
லேட்டரல் என்ட்ரி முறை சமூகநீதியின் மீதான நேரடித் தாக்குதல்…..! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Leave a Reply