,

லென்ஸ் மூலம் சூரிய ஒளியை கொண்டு ஜல்லிக்கட்டு ஓவியம் வரைந்த கோவை கலைஞர்

pongal
Spread the love

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை வருகின்ற 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையின் முக்கியமான நிகழ்வாக தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு விமர்சையாக  நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் ஜல்லிகட்டை ஊக்குவிக்கும் விதமாக கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த நகை வடிவமைப்பாளர் யு.எம்.டி ராஜா பூதக்கண்ணாடியை கொண்டு சூரிய ஒளி மூலம் ஜல்லிகட்டு ஓவியத்தை வரைந்துள்ளார். இதில் ஜல்லிக்கட்டு காளையும் மாடு பிடி வீரரும் இடம்பெற்றுள்ளனர்.இதற்காக 7 மணி நேரம் எடுத்து கொண்டுள்ள இவர் தமிழர்களின் வீரத்தையும் பாரம்பரியத்தையும் உலகிற்கு பறைசாற்ற வேண்டுமென தெரிவித்துள்ளார்.