ரூ.50 கோடிக்கு வாங்கப்பட்ட உலகின் விலையுயர்ந்த வுல்ஃப் டாக்

Spread the love

பெங்களூருவைச் சேர்ந்த நாய் வளர்ப்பாளர் ஒருவர் அரிய வகை வுல்ஃப் டாகை.50 கோடி செலவில் வாங்கிய சதீஷ், அது உலகின் மிக விலையுயர்ந்த நாய் என கருதப்படுகிறது.

இந்நாய், ஓநாய் மற்றும் காகசியன் ஷெப்பர்ட் இனங்களின் கலப்பினமாகும். அதன் தனித்துவம் மற்றும் அரிய தன்மை காரணமாக, செல்லப்பிராணி வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவர் சதீஷ், இந்த இனத்தை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்துவதை தனது குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

சதீஷ் தற்போது 150-க்கும் மேற்பட்ட நாய்கள் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார். 7 ஏக்கர் பரப்பளவிலான பண்ணையில், 6 பணியாளர்களை நியமித்து, நாய்களை பராமரித்து வருகிறார். மேலும், நாய்களை பார்வையிட வருபவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்.

இந்த சூழலில், உலகின் மிக விலையுயர்ந்த நாய் எனக் கருதப்படும் வுல்ஃப் டாக் விற்பனைக்கு வந்தது. அதனை ரூ.50 கோடி செலவிட்டு வாங்கியுள்ளார்.

சதீஷ் 8 மாதம் வயதுடைய “கேடபோம்ஸ் ஒகாமி”  என்ற வுல்ஃப் டாகை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளார். 5 கிலோ எடை கொண்ட இந்த நாய், தினமும் 3 கிலோ பச்சை இறைச்சியை உணவாக எடுத்துக் கொள்கிறது.

சதீஷ் கூறுகையில், “நாய்களை நேசிக்கும் மனப்பான்மை காரணமாக, இந்த அரிய இன நாயை 50 மில்லியன் டொலருக்கு வாங்கினேன். மக்களும் இதனை மிகுந்த ஆர்வத்துடன் பார்க்க வருகின்றனர். நாய்களுடன் செல்ஃபிகள் எடுக்க மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்.

மேலும், ஹாலிவுட் நட்சத்திரங்களை விட இந்த நாய் அதிக கவனத்தை பெறுகிறது. பல்வேறு நிகழ்ச்சிகளில் இதனை அழைத்துச் செல்லும்போது, பார்வையிட விரும்பும் நேரத்திற்கேற்ப 30 நிமிடங்களுக்கு 2,800 டொலர் முதல், 5 மணி நேரத்திற்காக 11,700 டாலர் வரை வருமானம் பெறுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பல கூட்டங்களுக்கு நாய்களை அழைத்துச் செல்லும்போது அவற்றை பார்வையிட 30 நிமிடங்களுக்கு, 2,800 டொலர் முதல் ஐந்து மணி நேரத்திற்கு 11,700 டாலர் வரை சம்பாதிக்கிறேன்” என்றார்.