மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது, “நாங்கள் 15க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்டிருந்தோம். அதிகமான தொகுதிகளை தர பாஜகவினர் விருப்பம் தெரிவித்தனர்.ஆனால் த்ற்போது தொண்டர்களின் பலத்தை அறிய ஒரு தொகுதியில் நிற்க முடிவு செய்துள்ளோம். அதனால், ராமநாதபுரத்தில் சுயேட்சை சின்னத்தில் நான் போட்டியிடுகிறேன். மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பிரதமராவார்.” என்று கூறினார்.
Leave a Reply