தமிழகத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான கோவையில் பல நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் கோவையில் அமையவுள்ள ராணுவ தொழிற்பூங்காவுக்கான அனுமதியை வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் சென் னைக்கு அடுத்து முக்கிய மான மாநிலம் என்றால் அது கோவை தான். தமிழ்நாட்டில் பல இரண்டாம் கட்ட நகரங்களில் கோவை ஒரு தொழிலை மட்டுமே நம்பி இருக்கும் நகரம் இல்லை. கோவை நகரில் வளர்ச்சிக்கு மேலும் பல நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகிறது. அதன்படி கோவையில் ராணுவ தொழில் பூங்கா அமைக்கத் தமிழ்நாடு அரசு முடிவு எடுத்தது.
இராணுவத்திற்குத் தேவையான இந்தியா பல விஷயங்களை இறக்குமதி செய்து வரும் நிலையில் அதனை மாற்றி இராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்கள், வெடி பொருட்கள், ராணுவ வாகனங்களை நமது நாட்டிலேயே தயாரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தச் சூழலில் கோவையில் ராணுவ தொழிற்பூங்கா அமைவது மிகப் அவசியமாக உள்ளது.
கோவையில் ஏற்கனவே மேட்டார் பம்பு, இயந்திர உதிரிப் பாகங்களைத் தயாரிக்கப் பல சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் உள்ள நிலையில், அவை இந்த ஆயுத பூங்கா மூலமும் நிச்சயம் பயன் பெறும் எனக் கூறப்பட்டது. இந்த ராணுவ உற்பத்தி பூங்கா சூலூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இங்கு ஏற்கனவே இந்திய விமானப் படைக்குச் சொந்தமான தளம் உள்ளது. எனவே, இங்கு ரூ. 260 கோடி மதிப்பீட்டில் ராணுவ தொழிற் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் சுமார் 10000 பேருக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்கிடையே சூலூர் வாரப்பட்டி ஊராட்சியில் சுமார் 370 ஏக்கரில் அமையவுள்ள இந்த தொழில் பூங்காவுக்கு இப்போது தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. சூலூரில் வாரப்பட்டி, கந்தம்பாளையம், சடையஞ்செட்டிபாளையம், பூசாரிபாளையம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் இந்த ராணுவ தொழிற்பூங்காவுக்கான் பணிகளைத் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் மேற்கொள்ளும்.
ராணுவ தொழிற்பூங்கா கோவையில் அமைக்க அனுமதி

Leave a Reply