,

ரயில் தண்டவாளத்தில் யானைகள் இறப்பதைத் தடுக்க புதிய கண்காணிப்பு அமைப்பு – அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்

அமைச்சர் மதிவேந்தன்
Spread the love
தமிழக – கேரள எல்லையான வாளையாரில் யானைகளின் உயிரிழப்பை தடுக்கும் வகையில் நவீன கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளத்தில் யானைகள் இறப்பதைத் தடுக்க தமிழ்நாடு வனத்துறை தனது லட்சியமான செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் இயக்கப்பட்ட கண்காணிப்பு அமைப்பை கொண்ட கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் மதிவேந்தன் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு மற்றும் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ்.ஆர்.ரெட்டி ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது, “யானைகள் உயிரிழப்பை தடுக்க அதிநவீன சென்சார் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. யானைகள் தண்டவாளத்தை கடக்கும்போது உயிரை பாதுகாக்கும் வகையில் 7 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது யானைகளை காக்க உலகிலேயே முதல்முறையாக தொடங்கப்பட்ட திட்டம்”  என்று அவர் கூறினார்.