,

ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

pregnant-lady-rail
Spread the love

7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி – சங்கரன்கோவிலைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவருக்கும், சென்னையைச் சேர்ந்த கஸ்தூரி (வயது 22) என்பவருக்கும் திருமணம் நடந்தது. தற்போது, கஸ்தூரி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இன்னிலையில் கணவரின் சொந்த ஊரில் வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக  கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் கஸ்தூரி குடும்பத்துடன் சென்றபோது எஸ் 9 பெட்டியில் பயணித்துக் கொண்டிருந்த கஸ்தூரிக்கு திடீரென வாந்தி வந்துள்ளது பெட்டியின் நுழைவு வாயிலில் உள்ள கை கழுவும் இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக கஸ்தூரி ரயிலில் இருந்து கீழே விழுந்தார்.இதை பார்த்து  அதிர்ந்து போன உறவினர்கள் எஸ்9  பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர். ஆனால், அது பழுதடைந்ததால் ரயில் நிற்கவில்லை. இதனால், எஸ் 8 பெட்டிக்கு ஓடிச் சென்று அங்கிருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். அதற்குள் அந்த ரயில் கர்ப்பிணி விழுந்த இடத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று விட்டது. உடனடியாக ரயில் நின்றிருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.இதனிடையே, கஸ்தூரியின் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்துவதற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில், கஸ்தூரிக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆனதால் அவரது இறப்பு குறித்து விசாரிக்க ர்.டி.ஓ.வுக்கு கோட்டாட்சியர் விருத்தாசலம் ரயில்வே போலீசார் பரிந்துரை செய்துள்ளார். அதன்படி திருக்கோவிலூர் ஆர்.டி.ஓ. கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார்