ஸ்ரீ அன்னை கரங்கள் நல சங்கம் சார்பில் 7வது ஆண்டு ரத்த தான விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி கோவை நேரு ஸ்டேடியம் அருகே இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுரேஷ், பொருளாளர் யுவராஜ், பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு கோட்ட பொறியாளர் மனுநீதி, ஜி.டி அறக்கட்டளை தலைமை திட்ட அதிகாரி அஞ்ஜனகுமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பேரணியில் கலந்து கொண்டனர். இரத்ததானம் வழங்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ரத்த தான விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி

Leave a Reply