ரசிகர்கள் வெள்ளத்தில் விஜய்

vijay
Spread the love

த.வெ.க.வின் பூத் கமிட்டி கருத்தரங்கு கோவையில் இன்று நடைபெற உள்ளது. பூத் கமிட்டின் கருத்தருங்கில்  முதற்கட்டமாக கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம்  மாவட்டங்களை சேர்ந்த த.வெ.க. பூத் கமிட்டி கோவை அருகே குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடத்துகிறார்.

இந்த  கருத்தரங்கில் த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் கலந்துகொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட அவர், கோவை விமான நிலையம் வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில்  விஜய்யை வரவேற்பதற்காக தவெக தொண்டர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் விமான நிலையத்தில் வழி நெடுகிலும் குவிந்துள்ளனர்.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெண்கள், குழந்தைகள் என   சுமார் 2 ஆயிரம் பேர் குவிந்துள்ளனர். விமான நிலைய வளாகத்தில் தொண்டர்களை நோக்கி விஜய் கையசைத்தார். தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் கூட்டம் அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.