நம் இந்திய தேசம் உலக நாடுகளுக்கு வழங்கிய மாபெரும் கொடை யோகாசனம். வாழும் கலையான யோகாசனத்தின் மகத்துவத்தை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது, அதன்படி கடந்த 2015 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
மாணவர்களிடையே யோகா குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கும் பட்சத்தில், அது ஆரோக்கிய நலனிலும் சமூக நலனிலும் ஆகச்சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்த்தும் வகையில், பள்ளிகள் கல்லூரிகளில் யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அந்த வகையில், கோவை ஜே கே நர்சிங் மற்றும் பாராமெடிக்கல் கல்லூரி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற சர்வதேச ஹரித் யோகா நிகழ்ச்சி கல்லூரியின் மைதானத்தில் நடைபெற்றது. மேலும் சுற்றுச்சூழலை பலப்படுத்தும் வகையில், மரம் நடும் நிகழ்வும் நடைபெற்றது. மைதானத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை மாணவர்கள் நட்டு வைத்தனர்.
சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு முதன்மை காரணமாக திகழும் நெகிழியை ஒழிக்கும் முயற்சியில், பிஸ்லேரி நிறுவனம் கொண்டு வந்துள்ள நெகிழிக்கு மாற்றான கண்ணாடி தண்ணீர் பாட்டில்களும் இந்த நிகழ்வின்போது அறிமுகம் செய்யப்பட்டது. கே எஸ் ஜி நிர்வாகத்தின் தலைவர் கீதா அவர்களின் வழிகாட்டுதலுடன், ஜே கே நர்சிங் கல்லூரி முதல்வர் வித்யா சரஸ்வதி முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர் Dr.சஞ்சனா ஜான் பங்கேற்றார்.
Leave a Reply