,

மௌனத்தால் பேசும் பிரகாசம் சுவாமிகள்

பிரகாசம் சுவாமிகள்
Spread the love

மௌனமாக இருந்து மக்களுக்கு ஞானம் வழங்கிய பல் சித்தர்களை கண்டுள்ளது தமிழகம். நமது காலத்தில், நம் கண் முன்னே அப்படி வாழ்ந்து வரும் சித்த புருஷர்தான் சுவாமிமலை மௌன குரு – “திண்ணை சித்தர் ” என அழைக்கப்படும் சத்குரு பிரகாசம் சுவாமிகள். சுமார் 55 வயது மதிப்புள்ள பிரகாசம் சுவாமிகள் , சுவாமிமலையில் அவதரித்தார்.
பள்ளி பருவத்திலேயே தன்னை மறந்து தியானத்தில் ஆழ்ந்த பிரகாசம் சுவாமிகள், அவரது குரு அருளால் ஆட்கொள்ளப் பட்டு தற்போது சுவாமிமலை வீதிகளில் சுற்றி வருகிறார். இளம் வயதில் தன் வயதுடைய சக நண்பர்களுடன், இவரும் மற்ற சிறுவர்கள் போல ஓடி, ஆடி, விளையாடி எந்த கவலையும் இல்லாதவராக இருந்தார். திடீரென்று ஆத்மஞானத்தின் உச்சத் தைத் தொட்ட அவரால், தன் வீட்டுக்குள் ஒரு குறுகிய அறைக்குள் முடங்கிக் கிடக்க இயல வில்லை. வீட்டை விட்டு வெளியேறினார். சுவாமி மலையையே சுற்றி சுற்றி வந்தார்.
உடம்பில் பொட்டுத் துணி கூட இல்லாமல், கால் போன போக்கில் நடந்த ஒருவரைப் பார்த்ததும் எல்லோ ரும் மனநலம் பாதிக்கப்பட்ட வராக இருப்பாரோ சுவாமிமலை மக்கள் நினைத்தனர். பிரகாசத்துக்கு மனநலம் பாதித்து விட்டதாக ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். பேசாத மௌனம், வானத்தையே வெறித்துப் பார்க்கும் கண்கள், குளிக்காத தோற்றம், இவை எல்லாம் ஒன்று சேர்ந்து பிரகாசம் சுவாமிகளை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தியது. பசித்தால், கை ஏந்துவார். யாராவது சாப்பாடு கொடுத்தால் ஓரிரு வாய் சாப்பிடுவார்.
நாட்கள் செல்லச்செல்ல பிரகாசம் சுவாமிகள் குடும்பத்தினருக்கே சலிப்பும் வெறுப்பும் வந்து விட்டது. மெல்ல மெல்ல சுவாமிகளை விட்டு விட்ட னர். சித்த புரு ஷர் என்றால் அவர் ஏதும் உப தேசிப்பது இல்லை. ஏதும் சித்துக்கள் செய்வது இல்லை. ஏதும் மந்திர தீட்சை அளிப்பது இல்லை. யாருடனும் பேசுவதில்லை. தன் தேவைகளுக்காகவும் பேசுவதில்லை.
குளிப்பது இல்லை ஆனாலும் ஒருபோதும் அவரிடம் நாற்றம் இல்லை. வெள்ளை வேஷ்டி, வெள்ளை துண்டு, சடை முடி, செருப்பில்லா கால்கள், சதா லயத்தில் ஆழ்ந்த கண்கள், கண்களில் ஞான கனல் இந்த எளிய தோற்றம்தான் அவருடையது.
நாடிவருவோர் தரும் பண்டங்களை ஓரிரு துண்டுகள் உண்பது உண்டு. வீதிகளில் எப்போதும் ஓயாத நடை. சிலபோது காலியாய் உள்ள திண்ணை களில் ஓய்வு. இதுவே அவரின் அன்றாடம். அவரை கண்டாலே பெரிய விடிவு என்று இன்றும் அவரை சுற்றி மக்கள் இருந்து வருகின்றனர்.