,

மோடி… ரூ.10 லட்சம் கோடி

modi
Spread the love

வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் நடப்பாண்டில் 10 லட்சத்து 70 ஆயிரத்து 700 கோடியை தாய் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் , இந்தியா 2024-ஆம் ஆண்டில் முதலிடத்தில் உள்ளது.
2024 ஆம் ஆண்டில் வெளிநாடு வாழ் இந்திய மக்கள் 129 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 10,70,700 கோடி ரூபாயை இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த பட்டியலில் மெக்ஸிகோ 68 பில்லியன் , சீனா 48 பில்லியன், பிலிப்பைன்ஸ் 40 பில்லியன், பாகிஸ்தான் 33 பில்லியன் என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இது உலக வங்கி தரவுகளின்படி, 2023 ம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட 1.2 சதவிகிதத்துடன் ஒப்பிடும்போது, ​​இந்த ஆண்டு பணம் அனுப்பும் வளர்ச்சி விகிதம் 5.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு பெரும் பணம் அனுப்பி வைக்கப்படுவதால், தெற்காசியாவிற்கு அனுப்பப்படும் பணம், வரும் நாட்களில் 11.8 சதவீதமாக வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டில் வாழ்ந்தாலும் பெற்றோர், உறவினர்கள் மீது கொண்ட பற்றினால் இந்தியர்கள் அதிகளவு பணத்தை தாய்நாட்டுக்கு அனுப்பி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி நேற்று மத்திய கிழக்கில் எண்ணெய் வளம் மிக்க நாடான குவைத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 1981ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் குவைத்துக்கு செல்வது இதுவே முதல்முறை.அதாவது, 43 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் குவைத் சென்றுள்ளார். குவைத் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு ஏராளமான அந்நிய செலவாணி கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *