அனைத்து விலையேற்றத்திற்கும் காரணம் மோடி அரசு தான். பயிர் காப்பீடு, வீடு கட்டும் திட்டத்திற்கு அதிக நிதியை மாநில அரசு தான் தருகிறது. இப்படி இருக்க பிறகு எப்படி அண்ணாமலை சொல்வது போல மோடி பெயரை வைக்க முடியும்? இந்துக்களுக்கு மோடி அப்பாவோ, அம்மாவோ, சொந்தமோ அல்ல எனவும் மோடி ஆட்சி முடிய 60 நாட்கள் தான் இருக்கிறது.
கோவைக்கு எந்த திட்டமும் செய்யவில்லை என எஸ்.பி.வேலுமணி சொல்கிறார், திமுக செய்த சாதனை குறித்து வேலுமணி உடன் விவாதிக்க தயார். வேலுமணி லஞ்சம் வாங்கியதை நிரூபிக்க தயார். அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்றது. கொள்ளை கூட்ட கும்பல் போல அதிமுக ஆட்சி நடத்தியது.
போதை பொருள் கடத்தலுக்கும், முதல்வருக்கும் என்ன சம்பந்தம்? குட்கா விற்க டிஜிபி பணம் வாங்கியது அதிமுக ஆட்சியில் தான் நடந்தது. அதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் சொல்லட்டும். முதல்வர் தந்த திட்டங்களால் அதிமுகவினரின் மனைவிகளே திமுகவிற்கு தான் வாக்களிப்பார்கள். முதல்வர் தவறு செய்தவருக்கு ஆதரவு தரவில்லை எனவும் யார் தவறு செய்தாலும் முதல்வர் தண்டிப்பார். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் எடப்பாடி பழனிசாமி எதுவும் செய்யவில்லை. கோடநாடு வழக்கில் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி தொழிலே ஏமாற்றுவது, துரோகம் செய்வது தான் அதற்காக அவருக்கு விருதுகள் வழங்கலாம்.
Leave a Reply