பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடம் கடந்த 600 ஆண்டுகளுக்கு மேலாக சைவத்தையும், தமிழையும் போற்றுவதிலும், பேணுவதிலும் முதன்மையாக திகழ்ந்து வரும் மிகப்பெரும் ஆதீனமாகும். தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் 25-வது குருமகா சன்னிதானங்களாக இருந்து அருளாட்சி செய்து வருகிறார்.
இங்கு ஆண்டுதோறும் கோடையில் தமிழ் நெறி வழிபாட்டியல் , வாழ்வியல், அருளியல்,சமய பயிற்சிகள் நடப்பது வழக்கம். மே 1-ம் தேதி தொடங்கிய வகுப்புகள் வரும் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சியில் மொரிசியஸ், சென்னை, சேலம் ,ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 60-க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெறுகின்றனர்.
வேள்வி ஆசிரியர்கள் பெரியசாமி, ஜெயப்பிரகாஷ் மற்றும் ஓதுவா மூர்த்திகள் ஆகியோர் தமிழ்நெறி பூசை வழிபாடு, சித்தாந்தம், பன்னிரு திருமுறைகள் ஆகியவற்றினை பயிற்றுவிக்கின்றனர். நிறைவு நாளில் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அனைவருக்கும் சான்றிதழ் அளித்து, அருளாசி வழங்குகிறார். கடந்த காலங்களில் இங்கு சமய பயிற்சி பெற்ற பல்லாயிரக்கணக்கான வேள்வி ஆசிரியர்கள், அடியார்கள் உலகம் முழுவதும் தமிழ் நெறி வழிபாட்டினை பரப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மொரிசியஸ் நாட்டினர் 60 பேருக்கு பயிற்சி அளித்த பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார்

Leave a Reply