பாகிஸ்தானுடன் நிலவும் அதிகரித்துள்ள பதற்றத்தையடுத்து, மத்திய அரசு மே 7ம் தேதி அனைத்து மாநிலங்களிலும் போர்க்கால ஒத்திகை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடியுடன் பாதுகாப்புத்துறை செயலாளர் நடத்திய ஆலோசனையின் பின்னணியில் இந்த முக்கிய உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள அறிவுறுத்தலில், விமானத் தாக்குதல் அல்லது பிற சீர்கேடான சூழ்நிலைகள் ஏற்படும்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மக்கள் தெளிவுபட வேண்டும் என்பதற்காக இந்த ஒத்திகைகள் நடத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதற்காக, அபாய சைரன்கள் ஒலிக்கவிட்டு, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகரும் செயல் திட்டங்கள், அவசர பதிலளிப்பு அணிகள் மற்றும் மருத்துவ உதவி நடவடிக்கைகள் அனைத்தும் ஒத்திகையிலடங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, எதிர்பாராத அச்சுறுத்தல்களுக்கிடையில் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு தயார்நிலையை உறுதி செய்யும் நோக்கத்தில் எடுக்கப்பட்டதாகும்.
Leave a Reply