,

மே தினத்தில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்தி்க்

n karthik
Spread the love

கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில், கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில்,  உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்‌ முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். பின்னர் 200 க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில்,  மாநகர் மாவட்ட திமுக துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், மாநகர் மாவட்ட திமுக பொருளாளர் எஸ்.எம்.பி.முருகன்,எல்பிஎஃப் ஆட்டோ தொழிற்சங்க பொதுச் செயலாளர் ப.வணங்காமுடி,மாநகர் மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் அணி அமைப்பாளர் ஏ.எஸ்.ஜெயக்குமார், மாநகர் மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் டெம்போ சிவா, மாநகர் மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் கராத்தே அர்ஜூனன், எல்பிஎஃப் ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் பூபதி, சி.செல்வன்,கார்த்திகேயன், வட்ட செயலாளர்கள் கே.ராமநாதன்,எஸ்.போஸ், டவுன் பா.ஆனந்தன்,  சாரமேடு இஸ்மாயில்,எல்பிஎஃப் தொழிற்சங்க நிர்வாகிகள், திரளான ஆட்டோ தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.