,

மேற்கு வங்க மாநிலத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 15 பேர் பலி

train accident
Spread the love

மேற்கு வங்க மாநிலத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 15 பேர் பலியாகியுள்ளனர்.

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து இந்த விபத்தில்  முதற்கட்டமாக 4 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.  மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில்  தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்தபோது, அந்த ரயில் மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதியதில், ரயிலின் கடைசி 3 பெட்டிகள் முற்றிலும் சீர்குலைந்தன. தொடர்ந்து ரயில் பெட்டிகள் பல தடம்புரண்டன.

இந்த  விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுள்ளனர். இந்த விபத்தில் 5 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியது. மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும்  சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.