, ,

மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்கள் – குரல் வாக்கெடுப்பின் மூலம் மக்களவையில் நிறைவேற்றம்

amit shah
Spread the love

ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இருந்த குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களும் மக்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டன.

பாரதிய நியாய சன்ஹிதா, பாரதியா நாகரிக் சுரக்‌ஷ சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்‌ஷ மசோதா ஆகிய மூன்று மசோதாக்களையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த வாரம் மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மூன்று சட்டங்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த மூன்று மசோதாக்களும் முறையாக இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898 மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் 1872 ஆகியவற்றிற்கு மாற்றாக அமையும்.