இந்தப் பெயரை கேட்டாலே ஆளும் திமுக அரசில் உள்ள உயர் அதிகாரிகள்,அரசில் அங்கம் வகிக்கும் மக்கள் பிரதிநிதிகள் என அனைவரின் மனதிலும் அச்ச உணர்வு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் ஆளும் அரசின் அத்துமீறல்கள், புள்ளி விவரங்களுடன் தகவல்கள், அரசின் திட்ட மதிப்பீட்டில் உள்ள குளறுபடிகள் உள்ளிட்டவைகளை தினம் தோறும் வெட்ட வெளிச்சம் போட்டு அரங்கேற்றுவதால் அரசு தரப்பினருக்கு அந்த அச்ச உணர்வு எளிமையாக தொற்றிக் கொள்கிறது.
கோவை கணபதி சி. எம். எஸ்.பள்ளியில் பயின்ற செல்வகுமார், குமரகுரு பொறியியல் கல்லூரியில் பட்டம் பயின்றவர். அடிப்படையில் சமுதாய சீர்கேடுகளை,வெளிக்கொண்டுவரும் இயல்பினை கொண்டவர்.
அரசு நிறுவனங்கள் மற்றும் மருத்துவத்துறைக்கு பயன்படும் மென்பொருளை உருவாக்கி, அதனை செயலாக்கம் செய்யும் நிறுவனத்தை கோவை காளப்பட்டி பகுதியில் 50 -க்கும் மேற்பட்ட பொறியியல் வல்லுநர்களை இணைத்து நடத்தி வருகிறார்.
பாரதிய ஜனதா கட்சியின் இளம் தலைவர் கே.அண்ணாமலையால் அதிகம் ஈர்க்கப்பட்டு, கட்சிப் பணிகளில் முனைந்து செயலாற்றி வருகிறார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை, அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டபோது, அங்கு களப்பணி ஆற்றியவர்.
கோவை பாராளுமன்றத்திற்கு உட்பட்ட கோவை வடக்கு,கோவை தெற்கு,கவுண்டம்பாளையம்,
சிங்காநல்லூர், சூலூர், பல்லடம் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கும்
பயணித்து, அந்தந்த பகுதி மக்களின் பிரச்சினைகள், நீண்ட காலமாக தீர்க்கப்படாத விஷயங்கள், தொழில் கட்டமைப்புகள், விவசாய வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள், நீர் மேலாண்மை, சாலை மேம்பாட்டு வசதிகள், மனித ஆரோக்கியம், மேம்பாலம், விமான, ரயில் போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் நிறைவேற்றும் வழி வகைகளையும் அறிந்து வைத்துள்ளவர் பி. எஸ். செல்வகுமார்.
சர்வதேச அளவில் கோவையினை மேம்படுத்த அனைத்து திட்டங்களையும் தயார் படுத்தி உள்ளார்.
கோவை பாராளுமன்ற தொகுதியினை முன்னோடி தொகுதியாக்கும் முயற்சிகளில் ஈடுபடுவார் என்பதில் ஐயமில்லை.
Leave a Reply