முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

Spread the love

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அ.தி.மு.க) முன்னாள் அமைச்சரும், தற்போது ஆரணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள சேவூர் ராமச்சந்திரனின் வீட்டில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். இவர் திருவண்ணாமலை மாவட்டம் சேவூர் கிராமத்தில் வசித்து வருகிறார். சேவூர் கிராமத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோன்று, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அ.தி.மு.க முன்னாள் எம்எல்ஏ நீதிபதியின் இல்லத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. 2016 முதல் 2021 வரை உசிலம்பட்டி தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த இவர்மீது, தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்படுகிறது.