,

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

sp velumani
Spread the love

கோவை தொண்டாமுத்தூரில், அதிமுக ஒன்றிய செயலாளர் டிபி.வேலுசாமி ஏற்பாட்டில் திமுக, மதிமுக, மற்றும் அமமுக உட்பட பல்வேறு கட்சிகளில் பொறுப்புகளில் உள்ள முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என 1000 க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர்  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில்,
முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், வருங்கால முதலமைச்சர் எடப்பாடியார் தலைமையேற்று மாற்றுக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அதிமுக என்பது ஒரு மாபெரும் இயக்கம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் மாபெரும் இயக்கமாக வளர்க்கபட்ட அதிமுக எனும் பேரியக்கத்திற்கு விவசாய குடும்பத்தில் பிறந்த எடப்பாடியார் அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்று சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அதிமுக ஆட்சி காலத்தில்  கடந்த நான்கரை ஆண்டு காலம் தமிழக முதல்வராக சிறப்பாக ஆட்சி செய்தவர் எடப்பாடியார்.
நீட், நீட் என்று மாணவ, மாணவிகளை திமுக ஏமாற்றி வருகிறது. ஆனால் நீட் தேர்வில் 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு கொண்டு வந்தவர் எடப்பாடியார். இதனால் அரசு பள்ளி மாணவ, மாணவிகளும் மருத்துவ படிப்பை படிக்க எடப்பாடியாரே காரணம்.
ஒரு விவசாயி சிறப்பாக நாட்டை ஆள முடியும் என்பதை நிருபித்து சிறப்பான திட்டங்களை தந்தவர் எடப்பாடியார். கொரோனா காலத்தில் மாணவர்களின் சிரமங்களை புரிந்து அனைத்து மாணவ, மாணவிகளையும் ஆல் பாஸ் திட்டம் கொண்டுவந்தவர் எடப்பாடியார்.
கோவை மாவட்டத்திற்கு இவ்வளவு திட்டங்கள் வந்திருக்கிறது என்றால் எடப்பாடியார் காரணம். தொண்டாமுத்தூர் தொகுதியில் ஏராளமான திட்டங்களை பெற்று தந்துள்ளோம். கோவை மாவட்டத்தில் 6 புதிய அரசு கலை கல்லூரிகளை கொண்டு வந்துள்ளோம். குறைந்த கட்டணத்தில் கல்வி பயிலும் வகையில் தொண்டாமுத்தூரில் அரசு கலை கல்லூரி கொண்டு வந்துள்ளோம்.கோவை மாவட்டத்தில் ஏராளமான பாலங்களைக் கொண்டு வந்தோம். ஆனால் திட்டங்களை முடிக்காமல் திமுக இழுத்தடித்து வருகிறது. தனியார் மருத்துவமனைக்கு நிகராக அரசு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளையும் கொண்டு வந்தோம். ஆர்டிஓ அலுவலகம், தாலுகா அலுவலகங்கள், கூட்டு குடிநீர் திட்டம் என திட்டங்களை நிறைவேற்றினோம்..
50 ஆண்டு காலத்திற்கு குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் மூன்றாம் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வந்தோம் .
அத்திட்டத்தை கூட முடிக்காமல் திமுக இழுத்தடித்து வருகிறது. 70 ஆண்டுகால பிரச்சனையான அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு எடப்பாடியார்  உடனே நிதி ஒதுக்கி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.‌ 90 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் திமுக அத்திட்டத்தை கூட முடிக்காமல் உள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை முடிக்காமல் உள்ளது . ஆகவே மக்கள் முடிவு செய்துவிட்டனர். எடப்பாடியார் மீண்டும் முதல்வராக வருவார். விடுபட்ட திட்டங்களை அத்தனையும் நிறைவேற்றுவார். எப்போது எடப்பாடியார் முதல்வர் ஆவார் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர் தமிழக மக்கள்.
விலைவாசி உயர்வு,சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வுகளால்  அனைத்து தரப்பு மக்களுமே பாதிக்கப்பட்டுவிட்டனர்.  விடியா ஆட்சி ஒழியவேண்டும். எடப்பாடியார் முதல்வராக வரவேண்டும் என மக்கள் காத்திருக்கின்றனர். எடப்பாடியார் உங்களைப் போன்ற இடத்திலிருந்து தான் இன்று அதிமுகவிற்கு பொதுச் செயலாளராக வந்துள்ளார். அவருக்கு  அனைத்து தரப்பு மக்களின் கஷ்டங்களும் நன்றாக தெரியும். எளிமையான தலைவர் எடப்பாடியார்.
அதிமுகவில் இணையும் உங்களுக்கு உறுதுணையாக அதிமுக என்றும் துணை நிற்கும். சிறப்பாக பணியாற்றுங்கள். உங்களுக்கான பொறுப்புகள் விரைவில் கிடைக்கும். உங்களை பெற்றோர்கள் மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்துள்ளார்கள். நன்றாக படிக்க வேண்டும்,” என்று அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் என்.கே.செல்வதுரை, மாவட்ட  பொருளாளர் என்.எஸ்.கருப்புசாமி, அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர்ஜி.கே.விஜயகுமார், பொதுக்குழு உறுப்பினர் டி.ஏ.சந்திரசேகர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மதுமதி விஜயகுமார், ஒன்றிய கழக செயலாளர் ராஜா (எ) ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.