வயது முதிர்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பான கவனிப்பையும், பராமரிப்பையும் வழங்குவதன் முக்கியத்துவத்தை அங்கீகரித்திருக்கும் அதுல்யா சீனியர் கேர், சில நாட்கள் என்ற குறுகிய கால அளவிற்கு தனது குடியிருப்பு வளாகங்களில் தங்கியிருக்கும் வசதியினை வழங்குகிறது. அறுவைசிகிச்சைக்கு பிறகு முழுமையாக குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பும் காலம் வரை அல்லது விடுமுறை சீசனில் சுற்றுலா பயணங்களை குடும்பங்கள் மேற்கொள்ளும்போது பாதுகாப்பான நபர்களிடம் முதியவர்களை பத்திரமாக ஒப்படைத்து விட்டு செல்வது என எதுவாக இருப்பினும், கனிவான ஆதரவை அதுல்யா சீனியர் கேர் வழங்குகிறது. பாதுகாப்பான சூழல் நிலவும் தனது வளாகத்தில் மூத்த குடிமக்களின் நலவாழ்வையும், சௌகரியத்தையும் அது உறுதி செய்கிறது. முழுமையான நலவாழ்விற்கு முன்னுரிமையளிக்கும் அதுல்யா, முதியவர்களின் தேவைகள் கண்ணியத்துடன் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்கிறது; நிம்மதியோடும் மனநிறைவோடும் வாழ்கிற ஒரு சூழலை அது அவர்களுக்கு அமைத்துத் தருகிறது.
அதுல்யா சீனியர் கேர்-ல் தங்கியிருக்கும் குடியிருப்பு வாசிகள் கண்ணியத்துடன் மதிக்கப்படுகின்றனர்; அவர்களது ஆர்வங்களை வெளிப்படுத்துகிற நடவடிக்கைகளில் ஈடுபட தீவிரமாக ஊக்குவிக்கப்படுகின்றனர். 24X7 பாதுகாப்பு மற்றும் துல்லியமாக செயல்படுத்தப்படும் கண்காணிப்பினால் எமது வளாகத்தின் முதியோர்களது பாதுகாப்பும், நலவாழ்வும் எங்களுக்கு முதன்மை முன்னுரிமையாக இருக்கிறது. பயிற்சி பெற்ற மற்றும் திறமையான எமது பணியாளர்கள் குழு, இரவு பகல் எதுவாயினும் தொடர்ச்சியான சேவை பராமரிப்பை வழங்குகிறது; எமது குடியிருப்பாளர்களுக்கு தேவைப்படும் கவனிப்பும், ஆதரவும் அவர்களுக்கு கிடைப்பதை தவறாமல் உறுதி செய்கிறது. ஒவ்வொரு தனிநபருக்கும் அவரது தனிப்பட்ட தேவைகள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் திட்டங்கள் பிரத்யேகமாக உருவாக்கப்படுகின்றனர். இதற்கும் மேலாக, நட்புறவோடும், சகோதரத்துவோடும் மனநிறைவு அளிக்கும் வாழ்க்கை மூலம் கிடைப்பதற்காக பல்வேறு பொழுதுபோக்கு செயல்பாடுகளில் முதியோர்கள் பங்கேற்க அனைத்து வசதிகளும் இங்கு இருப்பதால் சமூக ஒருமைப்பாடும், தோழமையான சூழலும் இங்கு நிலவுகின்றன.
பாதுகாப்பான மற்றும் தோழமையான சூழலை வழங்குவதற்கும் கூடுதலாக, அறுவைசிகிச்சைக்கு பிறகு மீண்டு குணமடைவதற்கான பயணம் சவாலானது என்பதை அதுல்யா சீனியர் கேர் புரிந்து கொள்கிறது. அதுவும் முதியோர்களுக்கு கூடுதல் ஆதரவும், உதவியும் தேவைப்படும் என்று அது நன்கு உணர்ந்திருக்கிறது. ஆகவே தான் அறுவைசிகிச்சைக்கு பிறகு ஓய்வெடுத்து இயல்பு நிலைக்கு திரும்பும் காலத்தில் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அதுல்யா குடியிருப்பு வளாகம் முழுமையான திறன் வசதிகளை கொண்டிருக்கிறது. பிரத்யேக பராமரிப்பாளர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களின் குழுவின் வழியாக அங்குள்ள ஒவ்வொரு குடியிருப்பாளரும், முழுமையாக குணமடைவதற்கு அவரவருக்கு தேவைப்படும் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்படும் தனிப்பட்ட கவனிப்பையும், சிகிச்சையையும் இங்கு பெறுகிறார்.
அதுல்யா சீனியர் கேர்-ன் நிறுவனர் & தலைமை செயல் அதிகாரி ஜி ஶ்ரீனிவாசன் இது தொடர்பாக கூறியதாவது, “கனிவான மற்றும் இனிமையான சூழலில் மிக உயர்ந்த தரத்தில் பராமரிப்பு சேவையை பெற்று பாதுகாப்பான கைகளில் தங்கள் அன்புக்குரியவர்கள் இருக்கிறார்கள் என்ற உத்திரவாதத்தை அதுல்யா சீனியர் கேர்-ல் நிச்சயம் குடும்பத்தினர் பெறுவார்கள். விடுமுறை காலங்களின்போது ஒரு சில நாட்கள் குறுகிய காலத்திற்கு தங்கியிருப்பது அல்லது அறுவைசிகிச்சை அல்லது நோய் பாதிப்பிற்கு பிறகு குணமடைதலுக்கான மீள்நிலை காலத்தின்போது ஆதரவு என எதுவாகயிருப்பினும் தாங்கள் நேசிக்கும் நபர்கள் அதுல்யா சீனியர் கேர்-ல் பாதுகாப்பான கரங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர் என்ற நம்பிக்கையை நிச்சயமாக கொண்டிருக்கலாம்.”என்று கூறினார்.
Leave a Reply