முதல்வர் தன்னுடைய அமைச்சரவை சகாக்களை மாற்றிக் கொண்டே இருக்கக் கூடிய சூழல் வருங்காலத்திலும் வரும் – வானதி சீனிவாசன் பேட்டி

vanathisrinivasan
Spread the love
கோவை, சித்தாபுதூரில் புதிய நவீன அங்கன்வாடி மையம் : பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்.

பின்னர் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்  செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது :-

ஒன்றரை மாத காலமாக பட்ஜெட் கூட்டத் தொடர் சட்டப்பேரவையில் நடைபெற்று, தொகுதியுடைய பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை, துவக்கி வைக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. கோவை தெற்கு தொகுதியில், இந்திய அரசினுடைய பெட்ரோலிய துறையின் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின்,  சமூக பங்களிப்பு திட்டம், சி.எஸ்.ஆர் நிதியின் கீழாக, கோவை தெற்கு தொகுதியில் மட்டும் புதிய நவீன அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டு உள்ளது. இதற்காக முதலில் பிரதமருக்கும், மத்திய அமைச்சர் ஹர்டிசிங் பூரி  – அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

வழக்கமாக சட்டப் பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து, பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை தொகுதியில் ஏற்படுத்தினாலும் கூட, குறைவான காலத்திற்கு உள்ளாக மக்களுடைய எதிர்பார்ப்புகளை தேவைகளை நிறைவேற்றுவதற்கு போதுமானதாக இல்லை.  அதனால் சி.எஸ்.ஆர் நிதியின் உதவியோடு பல்வேறு முயற்சிகளை இந்த தொகுதியில் நான் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறேன்.

குழந்தைகளுக்கு பால் வழங்குகின்ற திட்டம், இளம் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்குகின்ற திட்டம், கோவில்களுக்கு எண்கணை வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம். அதேபோல இவையெல்லாம் இருந்தாலும் கூட அங்கன்வாடிக்கு நாங்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து கொண்டு இருக்கிறோம்.

பெண்களும் குழந்தைகளும் இந்த சமுதாயத்தின் மிகப்பெரிய அங்கமாக பார்க்கிறோம். பெண்களுடைய உரிமை சுதந்திரம் பாதுகாப்பு எப்படி ? முக்கியமோ அதேபோல அவர்கள் கர்ப்ப காலத்தில் சரி, குழந்தைகளுக்கும் சரி, அதற்குப் பின்பாக குழந்தைகளுடைய இளமைக் காலத்தில் கவனிப்பு நிலை போன்றவைகளை, அதேபோல மகளிர் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கிய இடத்தை பிடித்து இருக்கிறது சமூகத்தில். அந்த வகையில் இன்று ஏழு புதிய அங்கன்வாடி மையங்கள் இந்த தொகுதியில் திறக்கப்பட்டு உள்ளது. இந்த அங்கன்வாடி மையம் கூட சாதாரண ஒரு கட்டிடம் என்பதை தாண்டி, அங்கன்வாடி மையத்திலே சோலார் வாயிலாக, மீன் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு யூனிட் மின்சாரம் கூட இந்த அங்கன்வாடி மையத்திற்கு வெளியில் இருந்து எடுக்க தேவையில்லை. நெட் மீட்டரின் பொருத்தி சோலார் வாயிலாக மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது. இது இங்கு மட்டும் இல்ல அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. அதேபோல குடிப்பதற்கு ஆரோ வாட்டர் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதே குழந்தைகளுக்கு பாதுகாப்பான குடிநீர் தேவைக்காக ஏற்படுத்தப்பட்டு உள்ளது.  அதேபோல குழந்தைகளுடைய மெண்டல் ஹெல்த்தை ஊக்கப்படுத்த விளையாட்டு உபகரணங்கள்  பொருட்கள், ஏற்படுத்தி தரப்பட்டு உள்ளது. சுற்றுப்புற சூழலுக்கு எந்த வகையிலும் உதவும் வகையிலேயே ஏற்படுத்திக் கொடுக்கபட்டு உள்ளது.. என்னுடைய இலக்கை என்பது அடுத்த ஒரு வருடத்திற்கு உள்ளாக கோவை தெற்கு தொகுதியில் அத்தனை அங்கன்வாடி மையங்களும், குழந்தைகளை விட்டு விட்டு சென்றால் தாய்மார்கள் தங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்கள் அந்த குழந்தைகளுக்கு ஒரு நல்ல ஆரோக்கியமான சூழல் இருக்கிறது. என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது தான். என்னுடைய இலக்காக கொண்டு இருக்கிறோம்.

கோடை காலத்தில் மக்களுக்கு குடிநீர் வழங்குவதில், குடிநீர் வழங்கும் ஏ.டி.எம் கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதற்கென்று மின்னணு அட்டை வழங்கப்பட்டு 20 லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கிக் கொண்டு இருக்கிறோம். இன்னும் கூட அந்த பணியை தீவிரப்படுத்துவதற்கு தன்னார்வலர்கள் முயற்சிகள் ஈடுபட்டு உள்ளார்கள். இவை இல்லாமல் மாநில அரசாங்கத்திற்கு இந்த தொகுதி சார்ந்த பிரச்சனைகளை, என்ன தேவை இருக்கிறதோ அதை, சட்டப் பேரவையில் குறிப்பிடுவது என இந்தக் கூட்டத் தொடர் கூடும் முன்பே, கோவை தெற்கு தொகுதிக்கான பிரச்சனைகளை நான் பேசிக் கொண்டு இருக்கிறேன். இதற்கு அமைச்சர்களும் பதில் அளித்து இருக்கிறார்கள். குறிப்பாக மாநில அரசு,  நம்முடைய பகுதியை மட்டும் தனியாக குறிப்பிட்டு செலவு செய்த தொகையோடு, பட்டியல் கொடுத்து இருக்கிறார்கள். ஏனென்றால் இத்தனை திட்டங்களை இந்த பகுதியுடைய திட்டங்களை நாம் பெற்றுக் கொடுத்து இருக்கிறோம். இத்தனை திட்டங்கள் கோவை பகுதியில் செயல்படுத்தப்படுவது என்பது சிறப்பு தான்.  இன்னும் தான் என்னுடைய ஆலோசனை மற்றும் தேவைகளை நான் கூறி வந்து இருக்கிறேன். முதலமைச்சரும், தகுந்த நேரத்தில் நாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கெல்லாம் பதில் கொடுத்து இருக்கிறார்.

சட்டப் பேரவை தலைவர் உடைய குறுக்கீடுகள், நேரம் குறைவாக கொடுத்தல் என்ற பல்வேறு பிரச்சனைகள் இருந்தாலும் கூட, அதற்கு இடையே கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி மக்களினுடைய நலன்களை பாதுகாக்கின்ற திட்டத்தில் நாங்கள் செயல்பட்டு இருக்கிறோம். இவையில்லாமல் மிக முக்கியமாக,  மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பிலே நம்முடைய ஒவ்வொரு பகுதியை சார்ந்த மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கை மற்றும் சமுதாயத்தின் உடைய ஒருங்கிணைந்த வளர்ச்சி அதற்காக ஜாதிவாரி கணக்கெடுப்பு என்ற ஒரு விஷயத்தை நேற்று அறிவித்து இருக்கிறார். இதன் வாயிலாக தமிழக மட்டுமல்ல பல்வேறு மாநிலங்களில், மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதே அவர்களுடைய சார்ந்து இருக்கின்ற சமுதாயத்தைப் பற்றிய கணக்கு எடுப்பதன் வாயிலாக, அவர்களுக்கு மேம்பட்ட வசதிகளை செய்து கொடுக்க முடியும் என்பதை மத்திய அரசு நம்புகிறது. பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலின மக்களை எப்பொழுதுமே பிரதானமாக வைத்து இருப்பவர் பிரதமர்.

கடந்த 12 வருடங்களாக இதுவரை இல்லாத அளவிலே, ஓ பி சி பிரிவினர் அமைச்சரானது, நேஷனல் கமிஷனுக்கு சட்ட பூர்வ அந்தஸ்தை கொடுத்தது, பட்டிகள் இன பழங்குடியின மக்களுக்கான வளர்ச்சி திட்ட பணிகளை செயல்படுத்தியது, குறிப்பாக இந்த சமூகத்தைச் சார்ந்த மக்கள் தான் வறுமை கோட்டிற்கு கீழாக இருந்தார்கள். இவர்களுக்காக நிறைவேற்றப்பட்ட பல்வேறு அடிப்படை தேவைகளுக்கான குற்றங்கள், குறிப்பாக ஸ்வச் பாரத், நீர்நிலைகள், ஜல்ஜீவன் மிஷின், ஆவாஸ் யோஜனா, இலவச எரிவாயு இணைப்பு, வங்கி கடன் திட்டத்தில் பெண்களுக்கு உரிமை என பல்வேறு திட்டங்களை குறிப்பாக பெண்களுக்கு கொடுத்து இருக்கிறார் பிரதமர். அதனால் அடுத்த வட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பின் வாயிலாக, யாருக்கு எந்த உதவியும் தேவையோ அவர்களுக்கு அந்த திட்டங்களை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே, ஜாதி வாரீர் கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது. இதன் வாயிலாக பிற்படுத்தப்பட்ட மக்களின் வளர்ச்சி மிகவும் வேகமாக இருக்கும்.

தமிழகத்திலே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து இருந்தார்கள், ஆளுகின்ற தி.மு.க கூட ஜாதி வாரி கணக்கெடுப்ப வேண்டும் என தீர்மானத்தை சட்டப் பேரவைகள் நிறைவேற்றினார்கள், மாநில அரசை இதை செய்வதற்கு வாய்ப்பு இருந்தால் கூட மத்திய அரசு இதை செய்ய வேண்டும் என கூறி, அந்த சூழ்நிலைகளையும் நாங்கள் அறிந்து மத்திய அரசு அதை செய்கிறது என்று கூறினார்.

நம்முடைய நாட்டில் ஏதாவது ஒரு வருடத்தில், ஏதாவது மாநிலத்திற்கு எலக்சன் வந்து கொண்டு தான் இருக்கிறது. எந்த திட்டத்தை அறிவித்தாலும் இது இந்த மாநில தேர்தலுக்கு அந்த மாநில தேர்தலுக்கு என்று ஏதாவது சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள் அதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. அதற்காகத் தான் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற இலக்கை நோக்கி செயல்படுகிறோம். பீகார் தேர்தலை மனதில் வைத்து இப்படி செயல்படவில்லை, ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்காக இதை செயல்படுத்துவதாக நாங்கள் நினைக்கிறோம்.. பிரதமர் மோடி எதை செய்தாலும் தேர்தலுக்காக செய்கிறார் என்பதை கூறுவது ஒரு வழக்கமான அரசியலாக தான் நாங்கள் பார்க்கிறோம் என்றார்.

தகுந்த நேரத்தில் இவைகள் செயல்படுத்தும் என மத்திய அரசு அறிவித்து இருக்கிறது என்று கூறினார். 2011 ஆம் வருடம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பக் கணக்கெடுக்கின்படி மத்திய அரசு அவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறது. அப்படி இருக்கிற பொழுது அடுத்து வரக் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பிலே இந்த பொருளாதார ரீதியிலான முன்னேற்ற மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஒட்டுமொத்த இலக்கு என்பது 2047 ல் இந்தியா முழுமை அடைந்த நாடாக இருக்க வேண்டும் என்பது தான் என கூறினார்.

தமிழக அரசு நடத்தக் கூடிய பள்ளிகளின் கணிதம் மற்றும் மொழிப் பாடம் தேவை, அவர்களுக்கு மொழிகளை கற்றுக் கொள்வதிலேயும் கணித மற்றும் அறிவியல் மிகவும் அவசியமாக இருக்கிறது. ஆனால் சர்வதேச அளவும் சரி இந்திய அளவிலும் சரி பல்வேறு ஆய்வுகள் என்ன சொல்கிறது என்றால், குழந்தைகள் 8, 9 வகுப்புகளை தாண்டி செல்கிறார்கள், ஆனால் அவர்களால் ஒரு பக்கத்தை கூட முழுமையாக படிக்க முடிவதில்லை என்று கூறுகிறார்கள். ஒரு பெரிய அளவிலான கணக்கை கூட அவர்களால் போட முடியவில்லை என ஆய்வு அறிக்கை சொல்கிறது. நாம் கல்விக் கூடங்களை நடத்துகிறோம், கல்வி திட்டங்களை கொடுக்கிறோம். ஆனால் எந்த அளவுக்கு குவாலிட்டியான ஒரு விஷயத்தை கொடுக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி இருக்கையில் பத்து பன்னிரண்டு பொதுத் தேர்வில் நடத்த தேவையில்லை, எல்லோரையும் பாஸ் பண்ணி விட்டு செல்லலாமே ?  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவருடைய,  ஒட்டுமொத்த தேர்வுகளை வேண்டாம் என சொல்லுகிறாரா? போட்டி தேர்வுகளுக்கெல்லாம் என்ன அளவுகோல் வைப்பது ? தேர்வு எல்லாம் எப்படி போட்டி போட்டு தமிழ்நாடு முன்னேறுவது ?… போட்டி தேர்வுகளுக்கு எல்லாம் எப்படி அளவுகோல் வைத்து தேர்ந்தெடுக்க முடியும் ?..என கேள்வி அனுப்பினா. குழந்தைகள் இடை நிற்றலை தவிர்ப்பதற்காக, படிக்கிறார்களோ ? படிக்கவில்லையோ ? அனைவரையும் பாஸ் செய்து விடுகிறார்கள்..

மாணவர்களின் எதிர்காலத்தை மிகவும் பாதிக்கும்..

இப்பொழுதெல்லாம் இன்ஜினியரிங் கிராஜுவேட் அதிகமாக வேலை கேட்டு வருகிறார்கள்.

என்னுடைய எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு வேலை கேட்டு வரக் கூடியவர்களில் பெரும்பாலானவர்கள் இன்ஜினியரிங் முடித்தவர்கள் தான். கடன் உதவி வாங்கி நான்கு வருடம் படித்து என்ஜினியர் ஆகிவிடுகிறார்கள். ஆனால் இது போன்ற விஷயங்களை ஒட்டுமொத்தமாக பார்க்க வேண்டும் அதுதான் சமூகத்திற்கு நல்லது என கூறினார்.

எல்லாரும் தனியார் பள்ளியை தேடும் பொழுது, அரசு பள்ளிகளில் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது.

அரசு பள்ளிக் கூடங்களில் மாணவர்களின் அறிவை வளர்க்கக் கூடிய வகையில் கல்வி கற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டை  ஒப்பிடும் போது வடமாநிலங்கள் 40 வருடங்கள் பின் தங்கியவை அதனால் அவர்களுடன் எப்பொழுதும் நாம் ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது. தமிழ்நாட்டின் இலக்கை உயரமாக வைத்து அதை நோக்கி நகர வேண்டும்.

தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய பெற்றோர்கள் நீட் பரீட்சை எழுதக் கூடிய மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். நீட் பரிட்சையை இன்று குழந்தைகள் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.  நீட் பரிச்சையில் தேர்ச்சி விகிதம் என்பது தமிழ்நாட்டில் நன்றாக உள்ளது. நீட் என்பதை தமிழ்நாட்டில் அனைவரும் ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள். சாதாரணமாக இருக்கக் கூடிய அரசு பள்ளி மாணவர்கள் வேலை விவசாயிகள் குடிசை மாணவர்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கு கூடிய தயங்குவதற்கு செல்லக் கூடிய கால்கள் இன்று மருத்துவராக கூடிய நீ கனவை தங்களுடைய குழந்தைகளுக்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இது மக்களுக்கான பிரச்சனை இல்ல தி.மு.க வின் அரசியல் பிரச்சனை.

முதல்வர் தன்னுடைய அமைச்சரவை சகாக்களை மாற்றிக் கொண்டே இருக்கக் கூடிய சூழல் வருங்காலத்திலும் வரும், அடுத்து வரக் கூடிய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழக அமைச்சரவையில் இருக்கக் கூடிய எத்தனை அமைச்சர்கள், அமைச்சர் அடைமொழி இல்லாமல் மக்களை சந்திப்பார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். சில சமயம் மக்களையே சந்திக்க முடியாத சூழ்நிலைகள் கூட உருவாகலாம்,

இதை நாங்கள் எச்சரிக்கையாக எல்லாம் சொல்லவில்லை. நீங்கள் செய்த செயலுக்கான வினையை தான் விரைவில் பார்ப்பீர்கள் என கூறுகிறோம் என்று கூறினார்.