கோவையைச் சேர்ந்த ஹாஸ்பே நிறுவனம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என வாக்குறுதி அளித்து முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு கோவையில் ஹாஸ்பே நிறுவனத்தின் தொடக்க விழாவில் நடிகை தமன்னா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.
பிரபல நடிகையான காஜல் அகர்வால் மூலம் தங்களிடம் முதலீடு செய்த ஏராளமானோருக்கு சொகுசு கார்களை பரிசாக வழங்கி, அதிக முதலீட்டாளர்களை கவர்ந்துள்ளார்கள். உண்மை என்று நம்பி பலர் பணம் முதலீடு செய்துள்ளனர். இப்படி டெல்லி, ஒடிசா, மகாராஷ்டிரா உள்பட நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ரூ.50 கோடி வரை முதலீடு பெற்றுள்ளனர். கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி முதலீடு செய்தவர்களுக்கு ‘ஹாஷ்பே’ நிறுவனத்தால் பணத்தை கொடுக்க முடியவில்லை.
இதனால் முதலீட்டாளர்களுக்கு உறுதியளித்தபடி பணத்தை கொடுக்க முடியாமல், அவர்கள் நிறுவனத்தை மூடிவிட்டனர். எனினும் ஹாஷ்பே நிறுவன வங்கி கணக்கில் உள்ள பணத்தை வைத்துக் கொண்டு மோசடி கும்பல் ஜாலியாக இருந்துள்ளது. இந்த நிலையில் , புதுச்சேரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் அசோகன் 98 லட்சம் ஏமாந்ததாக புதுவை சைபர் கிரைம் போலீசார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி பேர்வழிகளை தேடினர். கோவையில் நட்சத்திர ஓட்டலில் மோசடியில் தொடர்புடைய நித்தீஷ் ஜெயின் அரவிந்த்குமார் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சென்று அவர்களை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகை தமன்னாவுக்கு ரூ.25 லட்சம், காஜல் அகர்வாலுக்கு ரூ.18 லட்சம் என மொத்தம் 43 லட்சம் வழங்கியதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக நடிகை தமன்னா, காஜர் அகர்வாலை விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
முதலீட்டாளர்கள் பணத்தில் தமன்னாவுக்கு 25 லட்சம், காஜலுக்கு 18 லட்சம் கோவை வாலிபர்களின் தில்லாலங்கடி

Leave a Reply