,

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்

mk stalin
Spread the love

கோவையில் தமிழக முதலமைச்சர் திங்கட்கிழமை மக்களுடன் முதல்வன் திட்டம் துவக்க விழா, செம்மொழி பூங்கா அடிக்கல் நாட்டு விழா ஆகியவற்றில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காலை 8-30 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு காலை 9-20 மணிக்கு கோவை விமான நிலையம் வர உள்ளார். அங்கு ஒருங்கிணைந்த திமுக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. தொடர்ந்து, காலை 9.30 மணிக்கு ஆவாரம்பாளையம், எஸ்.என்.ஆர் கல்லூரியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை மாநில அளவில் தொடங்கி வைக்க உள்ளார்.

தொடர்ந்து, காலை 10.00 மணிக்கு காந்திபுரத்தில் செம்மொழிப் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். தொடர்ந்து, மதியம் 2-30 மணிக்கு முதல்வர் சென்னை திரும்ப உள்ளார்.

இந்நிலையில், இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. “மக்களுடன் முதல்வன்” துவக்க விழா நடைபெற உள்ள எஸ்என்ஆர் அரங்கத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதேபோல் செம்மொழி பூங்கா அடிக்கல் நாட்ட உள்ள மத்திய சிறை வளாகத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த பணிகளை தமிழக வீட்டு வசதி மேம்பாடு ஆய்வு துறை மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி பார்வையிட்டார். முதல்வர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உடன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ், மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.