இந்நிலையில் திங்கட்கிழமை அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் முன்பும் தொடர் போராட்டத்தை துவக்கி உள்ளனர். அதன்படி கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு ஊதிய முரண்பாட்டை கலைய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதில் கலந்து கொண்டவர்கள் சம வேலைக்கு சம ஊதியம், ஊதிய முரண்பாட்டை கலைய வேண்டும் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் ஊதிய குழுவின் செயல்முறைகளின் படி ஒரு குழுவிற்கு ஒரு அடிப்படை ஊதியம் தான் கொடுக்க வேண்டும் எனவும் ஆனால் ஆறாவது ஊதிய குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு இரண்டு வகையான அடிப்படை ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
கடந்த 10 ஆண்டுகளாக விடுமுறை நாட்களில் மட்டுமே போராட்டம் நடத்தி வந்தவர்கள் வேலை நாட்களில் போராட்டம் நடத்துவது இதுவே முதன்முறையாகும்.
Leave a Reply