மீண்டும் ஜெயித்தார் AK…

AJITH
Spread the love

தமிழ் திரைப்படங்களின் முன்னணி நடிகரான அஜித் குமார் தற்போது தன்னுடைய கவனத்தை முழுமையாக கார் பந்தயத்துக்கு திருப்பியுள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு அறிவிப்பில், அக்டோபர் முதல் மார்ச் மாதங்கள் வரை தான் நடிப்பில் ஈடுபடுவார் என்றும், அதற்கு பிறகு கார் பந்தயத்தில் முழுமையாக கவனம் செலுத்துவார் என்றும் தெரிவித்திருந்தார்.

அதன்படி, அவர் நடிப்பதற்காக ஒதுக்கிய காலக்கட்டத்தில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை முடித்தார். பின்னணி பணிகள் முடிந்ததன் பின்னர் சமீபத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தொடர்ந்து படம் தாமதமாகி வந்ததில் ஏமாற்றமடைந்த அவரது ரசிகர்கள், தற்போது இந்த திரைப்படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில், ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில், அஜித் குமார் பெல்ஜியாவில் நடைபெற்ற கார் பந்தயத்திலும் தன் தனிப்பட்ட சாதனையால் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார். அவர் பங்கேற்ற குழு, அந்தப் போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்து சிறந்த சாதனை நிகழ்த்தியுள்ளது.

இதுகுறித்து, அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். அதில், “இந்திய மோட்டார் ஸ்போர்ட்டிற்கு இது மிக முக்கியமான தருணம். உலகளாவிய ரேஸிங் மேடையான பெல்ஜியத்தின் மதிப்புமிக்க ‘ஸ்பா ஃபிராங்கோர்சாம்ப்ஸ்’ சர்க்யூட்டில், அஜித் குமார் மற்றும் அவரது குழு முக்கியமான P2 (இரண்டாவது இடம்) வெற்றியை பெற்றுள்ளனர். இது, ஆர்வம், துல்லியம் மற்றும் விடாமுயற்சிக்கு ஒரு சான்றாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *